ஜூம்மா தொழுகைக்கு பின்பு ஜமாத்தினர் , இளைஞர்கள் , ஊர் பெரியோர்கள் என திரளான மக்கள் பள்ளியில் அமர்ந்தனார். பிரச்சினையில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது என்பதினை ஜமாஅத் நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா அவர்களிடத்தில் தெரிவித்தார்.
பின்பு அந்த மக்கள் மத்தியில் இப்பிரச்சினை சம்பந்தமாக நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதினை அண்ணன் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் எடுத்துரைத்தார் ...அவர் பேசுகையில் பொறுமையாகவும் , அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதினையும் இளைஞர்கள் ஜமாத்தார்களுக்கு கட்டுபட்டு நடக்க வேண்டும் , யாரும் தினிச்சையாக முடிவு எடுக்க வேண்டாம் என்பதையும் தெரிவித்தார் , பின்பு கலந்த ஆலோசனை நடைப்பெற்றது ஜமாத்தினருக்கு தமுமுகவின் முழு ஆதரவு , இப்பிரச்சினையில் இருதி வரை உங்களோடு இருப்போம் என்பதனையும் ராவுத்தர்ஷா அவர்கள் தெரிவித்தார்.
-மதுக்கூர் ஃபவாஸ்
அரசை நம்ப வேண்டாம், நம் அனைவரும் ஒற்றுமையுடன் செய்யல பட்டால் அதுவே போதும்.
ReplyDelete