.

Pages

Monday, May 19, 2014

ஜப்பானில் படிக்க உதவித்தொகை ! விண்ணப்பிக்க அழைப்பு !!

ஜப்பான் நாட்டில் படிக்க அந்நாடு வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகம் தெரித்துள்ளது.

இது குறித்து துணைத் தூதர் கயோகோ ஃபுருக்காவா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஜப்பான் நாட்டின் கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சார்பில் சர்வதேச மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மூன்றாண்டு தொழில்நுட்பம், வணிகம், ஃபேஷன் உள்ளிட்ட படிப்புகளுக்கும், 4 ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கும், பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிப்புக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு 1993 ஏப்ரல் 2-ஆம் தேதிக்கும் 1998 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கும் இடையில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்காலம். கல்வித்தகுதியாக பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த உதவித் தொகையை பெற சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தில் நடைபெறும் தேர்வெழுத வேண்டும்.

இதற்கு ஜப்பான் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இறுதித் தேர்வு பின்னர் நடத்தப்பட்டு, 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.

இதற்கான விண்ணப்பம் தேனாம்பேட்டை செனாடோப் சாலையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தில் பெறலாம். மேலும் www.studyjapan.go.jp என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமணி

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. In this regards students who are Interesting welcome to ......kindly contact me by e mail abudpworld@gmail.com only Advises providing without any profit.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.