.

Pages

Monday, May 12, 2014

அதிரையில் நடந்த மாவட்ட அளவிலான உடற்பயிற்சி போட்டிகள் !

அதிரையில் திரீஸ்டார் ஜிம் உடற்பயிற்சி மையத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நேற்று காலை சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட குத்துசண்டை கழக பொதுசெயலாளர் ஜெலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டளவில் போட்டியாளர்கள் பங்கேற்ற உடல் எடை அடிப்படையிலான உடற்பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தேர்வானவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆசியளவில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் பதக்கம் பெற்ற மெ.மு. அப்துல் ரஹூப் அவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகராட்சி தலைவர் S.R. ஜவகர் பாபு, லயன் சங்க தலைவர் அஹ்மது, லயன் சங்க செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, சு. பாஸ்கர், தங்கதுரை, பழஞ்சூர் செல்வம், மதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தஞ்சை மாவட்ட ஆணழகன் சங்க செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்த, நன்றியுரையை தஞ்சை மாவட்ட ஆணழகன் சங்க துணைசெயலாளர் நஜ்முதீன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களை வென்று குவிக்கும் அப்துல் ரஹூப் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களை வென்று குவிக்கும் அப்துல் ரஹூப் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.