.

Pages

Friday, May 23, 2014

AFFA வின் ஆறாம் நாள் ஆட்டத்தில் தஞ்சை அணியினர் அபார வெற்றி ! நாளை இரண்டு ஆட்டங்கள் !!

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் ஆறாம் நாள் ஆட்டம் இன்று [ 23-05-2014 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய ஆட்டத்தில் தஞ்சை நேதாஜி அணியினரோடு ஒரத்தநாடு அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-4 என்ற கணக்கில் கோல் அடித்து தஞ்சை அணியினர் வெற்றிபெற்றனர்.

வழக்கம் போல் ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக லோட்டஸ் நெய்னா மற்றும் ராஜிக் அஹமது ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர். இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆட்டமாக பொதக்குடி அணியினரும், ஆலத்தூர் அணியும் மோத உள்ளனர். இதை தொடர்ந்து இரண்டாவது ஆட்டமாக அதிரை AFFA அணியினரும், மேலநத்தம் அணியினரும் ஆட இருக்கின்றனர். ஆட்டம் சரியாக மாலை 4.45 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.



1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இதோ என்னுடைய மின் அஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.