அதிரை தக்வா பள்ளி அருகில் அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ], கடற்கரைத்தெரு அர்ரவ்லா பெண்கள் மகளிர் கல்லூரி, பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையும் ஏ எல் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றின் சார்பில் இன்று [ 17-05-2014 ] மாலை 5 மணியளவில் கோடைகால பயிற்சி முகாமின் பரிசளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது, செயலாளர் ஜமில் M. ஸாலிஹ், அதிரை அமீன், அஹமது ஹாஜா ஆகியோர் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர சிறப்பு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ மாணவியரின் மார்க்க அறிவித்திறன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்தனர்.
இதைதொடர்ந்து இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 'உளவியல் அறிஞர்' மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி 'குடும்ப பிரச்சினைகளும் அவற்றுக்கு இஸ்லாம் கூறும் உளவியல் தீர்வுகளும்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
மாணவ மாணவிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது, செயலாளர் ஜமில் M. ஸாலிஹ், அதிரை அமீன், அஹமது ஹாஜா ஆகியோர் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர சிறப்பு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள். போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ மாணவியரின் மார்க்க அறிவித்திறன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிருபித்தனர்.
இதைதொடர்ந்து இஷா தொழுகைக்கு பிறகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 'உளவியல் அறிஞர்' மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி 'குடும்ப பிரச்சினைகளும் அவற்றுக்கு இஸ்லாம் கூறும் உளவியல் தீர்வுகளும்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
மாணவ மாணவிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.