.

Pages

Friday, May 16, 2014

அதிரை வாய்க்கால்தெருவில் இரண்டு ஆடுகளை கடித்து குதறிய வெறி நாய் !

அதிரை வாய்க்கால் தெருவில் நடமாடி வந்த இரண்டு ஆடுகளை இன்று அதிகாலையில் வெறி நாய்கள் கடித்து குதறியது. இதில் ஒரு ஆடு சம்பவயிடத்திலேயே துடிதுடித்து பலியானது. மற்றொரு ஆடு உயிருக்கு போராடி வருகிறது. அதிகாலையில் நடத்த சம்பவத்தால் இந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியினர் நம்மிடம் ஆதங்கத்தோடு கூறுகையில்...
'நடந்த சம்பவம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் சிறுவர் சிறுமிகள் அதிகளவில் புழங்கி வருகின்றனர். இன்று ஆட்டை கடித்து குதறிய வெறிநாய்கள் நாளை சிறுவர் சிறுமிகளை கடித்து குதறாது என்பதற்கு என்ன உத்திரவாதம் ? கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் நாய்கள் தொல்லை இல்லாமல் இருந்து வந்தது. சமீபகாலமாக மீண்டும் அதிகளவில் நாய்கள் புழக்கம் காணப்படுகிறது.

அதிகாலை நேரங்களில் தொழுவதற்காக பள்ளிகளுக்கு செல்வோருக்கு இடையூறாக இருந்து வருகிறது. அதிரையில் மீண்டும் அதிகரித்துள்ள நாய்கள் நடமாட்டத்தை குறைக்க அதிரை பேரூர் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

2 comments:

  1. பாவம், என்ன இது.

    ReplyDelete
  2. ஸஹீஹுல் புகாரி 1829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
    Volume:2,Book:28.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.