.

Pages

Monday, May 12, 2014

ஜொலிக்கும் செட்டியா குளம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெரு வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியா குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்படி கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக குளத்தை புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் விரைவில் திறப்பு விழா காணப்பட உள்ளது.

நமது கேமிராவில் சிக்கிய ஜொலிக்கும் செட்டியா குளத்தின் படங்கள் இதோ...








14 comments:

  1. என்னப்பா இப்படி பநிபுடின்கள்
    இன்னும் 5 ,10 அடி நிலம் எடுக்கலாம் என்று இருந்தேன் ஆஹா போச்சே...

    ReplyDelete
  2. எப்படியோ இருந்த குளத்தை இப்படி ஆக்கி இருப்பது சாதனைதான். 5, 10அடி நிலம் திருடி இருந்தாலும் அதுவும் சாதனைதான். திருடாமல் விட்டதும் வேதனைதான்.

    ReplyDelete
  3. Amma tiddam valha..... nandri ADMK

    ReplyDelete
  4. கீழதெரு குளத்தை டெண்டர் எடுத்தல்லே பெரும் ஊழலாம்ல.. பணியே நடக்காமே செக் பாசாயிடுச்சாம் ஊரிலே பேசிகிறாங்க

    ReplyDelete
  5. செட்டியார் குளம் அருகில் உள்ள நமதூர் அனைத்து இஸ்லாமிய மக்களும் பல நூறு வருடங்களாக அங்கே குடி இருக்கும் நமதூர் பூர்விக வம்சா வழியினரே.நமது மக்களை விமர்சிக்கும் நமது சமூகத்தினர் .மாற்று மதத்தினர் மற்றும் நமதூரின் வந்தேறும் குடிகள் ஆக்கிரமித்து ECR . மண்ணப்பன் குளம்,கரிசமணி மற்றும் ஊரில் எத்துணையோ இடங்களில் நடந்திருக்கும் ஆக்கிரமிப்புகளை விமர்சனம் செய்யாதது வருந்தத்தக்க விசயமே .

    ReplyDelete
  6. //கீழதெரு குளத்தை டெண்டர் எடுத்தல்லே பெரும் ஊழலாம்ல.. பணியே நடக்காமே செக் பாசாயிடுச்சாம் ஊரிலே பேசிகிறாங்க//

    இதுபோல ஏன் ? கீழத்தெரு செய்நாங்குலம் தூர்வாரி வசதிகள் செய்யலே ? வேறுபாடுகள் எப்படி ஏற்ப்பட்டது ???????????????

    ReplyDelete
  7. எப்படி இருந்த குலம் இப்படி இருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. இதே 50 லட்சத்திற்கு செய்னா குளத்தை புரமனிக்கும் பணிகளை பாதயில் விட்டு சென்ற மருமம் என்ன?


    நன்றியுடன்

    மான் ஷேக்

    ReplyDelete
  9. இதே 50 லட்சத்திற்கு செய்னா குளத்தை புரமனிக்கும் பணிகளை பாதயில் விட்டு சென்ற மருமம் என்ன?

    இதுபோல ஏன் ? கீழத்தெரு செய்நாங்குலம் தூர்வாரி வசதிகள் செய்யலே ? வேறுபாடுகள் எப்படி ஏற்ப்பட்டது ???????????????

    ReplyDelete
  10. கோடிக்கணக்கில் செய்யும் வேலைகள் தொகைகளுக்கு பொருத்தமாக வேலைகள் குளம் தூர்வாரி செப்பனிடுதல், தார் ரோடு போடுதல் போன்ற வேலைகள் திருப்தியாக செய்யப்பட்டுள்ளது என்று சரியென்று யார் சர்டிபிகேட் தருவது ?

    இவைகளை அரசு இடமிருந்து பெறுவது கஷ்ட்டம். அப்படிப் பெற்றும் ஏமாறுவது பொது மக்களுக்கு வாடிக்கை. இப்பொழுது கட்சிகள் வாய் பொத்திவிடும் மர்மம்தான் என்ன? தொகைக்கு பொருத்தமாக வேலை செய்யப்பட்டுள்ளது என்று ஊரின் முக்கியஸ்தர்கள் குறைந்தது ஒரு 100 பேராவது கணித்து சரி என்று சொல்ல வசதிகள் இல்லையா ?

    ReplyDelete
  11. குளத்தினை நல்ல அழகுபடுத்தி கொடுத்த இருக்கும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

    இந்த குளம் மட்டும் அல்லாது ஏனைய அதிரையில் இருக்கும் எவ்வளவு நீங்கள் சுத்தம் செய்து கொடுத்தாலும் கழிவு நீர்வந்து சேரும் இடமாக தான் நமதூரில் இருக்கும் குளங்களை காண முடிகிறது.

    கழிவு நீர் செல்வதற்கு பாதாள வழிகளை ஏற்படுத்தினால் தான் குளங்கள் சுத்தமாகவும், அதிரை சுகாதரமாகவும் இருக்கும் காணமுடியும்.

    இந்த திட்டம் செயல்படுத்த பேரூராட்சி நிர்வாகம் தமிழக அரசின் நிதியும்,மாநில மத்திய அமைச்சர்களின் நிதியினை அதிரைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும்.

    தேர்தலில் எந்த ஒரு கட்சியும்,அமைப்புகளும்,பொது மற்றும் நடுநிலைவாதிகள் இதற்கு குரல் கொடுக்காமல் இருந்தது அதிரை பின்னோக்கி செல்வதற்கு ஒரு எடுத்துகாட்டு.


    ReplyDelete
  12. அம்மா திட்டம் வாழ்க அ தி மு க பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.