.

Pages

Wednesday, May 28, 2014

அதிரை ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 குடிசைகள் எரிந்து நாசம் !

அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள பிலால் நகரை அடுத்து ஏரிக்கு செல்லும் வழியில் வலதுபுற சாலையோரத்தில் மூன்று குடிசைகளில் சில குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தொழிலாக பன்றிகளை வளர்த்து வந்தனர்.

இன்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குடிசைகள்
முற்றிலும் எரிந்து நாசமாகின. தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. சேத மதிப்பு 50 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் தீ பரவமால் அப்பகுதியினர் தடுத்து நிறுத்தினர். திடீர் தீ விபத்தால் இந்தபகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தி தொகுப்பு : இப்ராஹிம் அலி


அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தீ விபத்து பகுதியை பார்வையிடுகிறார்









No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.