.

Pages

Friday, May 30, 2014

கோப்பையை கைப்பற்றியது தஞ்சை அணி ! பரிசுகளை அள்ளிக்குவித்தது அதிரை AFFA அணி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று [ 30-05-2014 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்க இருக்கிறது.

இன்றைய இறுதி ஆட்டத்தில் தஞ்சை அணியினரும் , நாகூர் கெளதியா அணியினரும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1 கோல் அடித்து  தஞ்சைஅணியினர் வெற்றிபெற்றனர்.

இன்றைய ஆட்ட நிகழ்சிகள் அனைத்தையும் SIS முஹம்மது இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டங்களின் பிராதான அம்பயராக வாசுதேவனும், இவருக்கு உதவியாக இம்ரான், ருத்வான் ஆகியோர் சிறப்பாக கையாண்டனர்.

இறுதி ஆட்டத்தை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், தஞ்சை மாவட்ட கால்பந்து கழகத்தின் செயலாளரும், அதிரை AFFA அணியினரின் ஆலோசகருமாகிய திரு.கோபாலகிருஷ்ணன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி, AFFA தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, துணைதலைவர் முஹம்மது தமீம், செயலாளர் சமியுல்லாஹ், பொருளாளர் அபுல் ஹசன் சாதுலி, துணைச்செயலாளர் அஹமது அனஸ், ஒருங்கிணைப்பாளர்கள் சேக் தம்பி, இத்ரீஸ், அஸ்ரப், பாருக், தாரிக் ஆகியோர் இன்றைய இறுதி போட்டியில் வெற்றி பெற்ற முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற தஞ்சை மற்றும் நாகூர் அணியினருக்கு பதக்கங்களையும், கோப்பையையும் வழங்கி கெளரவித்தார்கள்.  தொடரில் சாதனை நிகழ்த்திய சிறந்த 10 வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் அதிரை AFFA, நாகூர், தஞ்சை ஆகிய அணிகள் சிறப்பு பரிசுகளை அள்ளிகுவித்தன.

முன்னதாக வரவேற்புரையை  SIS முஹம்மது வழங்க, நன்றியுரையை AFFA துணைதலைவர் முஹம்மது தமீம் வழங்கினார். இறுதி ஆட்டத்தைகாண விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக வருகை தந்து ரசித்தனர்.

















1 comment:

  1. வெற்றி பெற்ற அணியினருக்கும்,இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்த அணியினரும் எனது வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவிக்கின்றேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.