இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம் கூறுகையில்: முத்துப்பேட்டை மாவட்டத்தில் ஒரு பெரிய ஊர், இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைவருக்கும் இந்த மருத்துவ மனை தான் உதவி. மேலும் தாலுக்கா தலை நகராக அறிவிக்கப்பட்ட இந்த முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்தவ மனையாக மாற்றாமல் அரசு கால தாமதம் படுத்தி வருகிறது. அதன் வகையில் இன்று நாய் கடித்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இனியாவது இந்த மருத்துவ மனையில் அனைத்து வசதிகளும் அரசு செய்து தர வேண்டும் என்றார்.
நன்றி : 'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் நிலைமைகள் இப்படி தான் இருக்கின்றனர், டாஸ்மாக் வரும் வருமானத்தில் கொஞ்சமாவது சுகாதாரமையங்களுக்கு செலவு செய்யலாமே! இலவசத்துக்கு ஒதுக்கும் கோடிகளை கல்வி துறை, சுகாதாரதுறைக்கு ஒதுக்கலாமே! செய்தார்களா? இல்லையே! இந்த அரசுக்கு மக்கள் சாவு மணி அடிப்பார்கள்.
ReplyDeleteவிரைவில் சிறவன் கௌசிக் குணமடைய பிராத்திப்போம்.
விரைவில் சிறவன் கௌசிக் குணமடைய பிராத்திப்போம்.
ReplyDeleteகுழந்தைகள் சம்பந்தமான செய்திகளை அதிகளவில் காண முடிகிறது. ஒன்று பெற்றோரின் கவன இன்மை மற்றொன்று அரசின் கவன இன்மை.
ReplyDeleteசென்னை,சேலம்,திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் குழந்தை ஆள் மாற்றம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எலி,கரப்பான் போன்றவை விளையாடியது.ஏப்ரல் மாதம் அதிகளவில் பேசப்பட்ட குழந்தைகள் போர்வெல் குழியில் சிக்கியது.
இன்று இந்த சிறுவன் வெறி நாய்டம் சிக்கியுள்ளான்.
வருமுன் காப்பாது அரசின் கடமை மட்டுமல்ல பெற்றோர்களின் கடமைகூட!!!
ஒரு வேண்டுகோள்...இம்மாதிரியான புகைப்படங்களை பதியும் முன் இளகிய மனமுடையோர் தவிர்க்கலாம் என்ற சின்ன அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் என்பது என் கருத்து... செய்தியை முந்தி தருவதில் இருக்கும் கவனம் இம்மாதிரியான விஷயங்களில் இருப்பது நல்லது.....
ReplyDelete