.

Pages

Sunday, May 25, 2014

அரை டஜன் கோல் அடித்து தூள் கிளப்பிய அதிரை AFFA அணி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் எட்டாம் நாள் ஆட்டம் இன்று [ 25-05-2014 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய ஆட்டத்தில் பொதக்குடி அணியினரும், அதிரை AFFA அணியும் மோதினார்கள். இதில் AFFA அணியின் நட்சத்திர வீரர் அசரப்  4 கோல் அடித்து தனது அணி இலகுவாக வெற்றிபெற உதவியாக இருந்தார். கடைசி நேரத்தில் களத்தில் இறங்கிய ஆசிப் ( கொய்யாப்பழம் ) தனது பங்குக்கு 1 கோல் அடித்தார். இதைதொடர்ந்து புருகான் 1 கோல் அடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் அதிரை AFFA அணியினர் 6 கோல் அடித்து வெற்றி பெற்றனர்.

இன்றைய ஆட்ட நிகழ்சிகள் அனைத்தையும் SIS முஹம்மது இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டங்களின் பிராதான அம்பயராக வாசுதேவனும், இவருக்கு உதவியாக அஜார், சம்சுல் ஹக் ஆகியோர் சிறப்பாக கையாண்டனர். இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளைய ஆட்டமாக காரைக்கால் அணியினரும், கோட்டையூர் அணியும் மோத இருப்பதாக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.


கம்பீரமாக காட்சியளிக்கும் பொதக்குடி அணியினர்

இன்றைய ஆட்டத்தில் ஜொலித்த அதிரை AFFA அணியின் நட்சத்திர வீரர்கள் 




1 comment:

  1. அசரப் வின் ஆட்டம் மிக சிறப்பாக இருந்தது.இதே போல் அடுத்த ஆட்டத்திலும் ஆடினால் Affa இறுதிப்போட்டியிலும்வெற்றி பெரும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.