இந்திய சாலைகளில் கடந்த 70 ஆண்டுகளாக கம்பீரமாக வலம் வந்த அம்பாசிடர் கார் தனது பயணத்தை முடித்துக் கொண்டது. அந்த காலத்தில் கார் என்றால் அது பணக்காரர்களின் அடையாளமாகவே இருந்தது. அதுவும், வெளிநாட்டு கார் என்றால் அவர்களின் அந்தஸ்து இன்னும் ஒருபடி மேலே இருக்கும். இந்த சூழ்நிலையில் தான் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான, அம்பாசிடர் கார் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சாலைகளில் தவழ தொடங்கியது. இந்நிலையில், கடந்த 1983ம் ஆண்டு, மாருதி&800 கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறிய வடிவமைப்பில், மிக கச்சிதமாக இருந்த மாருதி கார் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து கார் சந்தையில் தனக்கு என்று இடத்தையும் மாருதி தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையிலும், அரசியல்வாதிகள், பிரதமர், மத்திய&மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அம்பாசிடர் காரில் வலம் வந்து கொண்டுதான் இருந்தனர்.இந்நிலையில், காலமாற்றத்தினாலும், வேகமான பொருளாதார வளர்ச்சியினால், பிஎம்டபுள்யூ, பென்ஸ், போர்டு போன்ற வெளிநாட்டு கார்கள் அதிகளவில் வரத்தொடங்கியது. தற்போது விதமான, விதமான கார்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ள நிலையில், மிக பழமையான அம்பாசிடர் காரின் மவுசு மெல்ல, மெல்ல குறைந்துவிட்டது. இன்னொரு பக்கம், அரசாங்க கார் என்ற பட்டப்பெயருடன் செல்ல பிள்ளையாக இருந்த அம்பாசிடர் காரை பல மாநில அரசுகளும் தற்போது கைவிட்டுவிட்டு சொகுசுகார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அம்பாசிடர் கார் உற்பத்தி நேற்று முன் தினமும் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி அம்பாசிடர் கார் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், உத்தரபார பகுதியிலுள்ள ஆலையில் இருந்துதான் அம்பாசிடர் கார் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த கார் விற்பனையை மேம்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததாலும், பல்வேறு காரணங்களாலும் வேறு வழியில்லாமல் இந்த கார் ஆலையின் பணி மே.24 முதல் நிறுத்தப்படுகிறது என்று சிகே பிர்லா குரூப் கம்பெனி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பரிந்துரை : S.P. பக்கீர் முஹம்மது
நன்றி : தினகரன்
சிறிய வடிவமைப்பில், மிக கச்சிதமாக இருந்த மாருதி கார் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து கார் சந்தையில் தனக்கு என்று இடத்தையும் மாருதி தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையிலும், அரசியல்வாதிகள், பிரதமர், மத்திய&மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அம்பாசிடர் காரில் வலம் வந்து கொண்டுதான் இருந்தனர்.இந்நிலையில், காலமாற்றத்தினாலும், வேகமான பொருளாதார வளர்ச்சியினால், பிஎம்டபுள்யூ, பென்ஸ், போர்டு போன்ற வெளிநாட்டு கார்கள் அதிகளவில் வரத்தொடங்கியது. தற்போது விதமான, விதமான கார்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ள நிலையில், மிக பழமையான அம்பாசிடர் காரின் மவுசு மெல்ல, மெல்ல குறைந்துவிட்டது. இன்னொரு பக்கம், அரசாங்க கார் என்ற பட்டப்பெயருடன் செல்ல பிள்ளையாக இருந்த அம்பாசிடர் காரை பல மாநில அரசுகளும் தற்போது கைவிட்டுவிட்டு சொகுசுகார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அம்பாசிடர் கார் உற்பத்தி நேற்று முன் தினமும் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி அம்பாசிடர் கார் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், உத்தரபார பகுதியிலுள்ள ஆலையில் இருந்துதான் அம்பாசிடர் கார் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த கார் விற்பனையை மேம்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததாலும், பல்வேறு காரணங்களாலும் வேறு வழியில்லாமல் இந்த கார் ஆலையின் பணி மே.24 முதல் நிறுத்தப்படுகிறது என்று சிகே பிர்லா குரூப் கம்பெனி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பரிந்துரை : S.P. பக்கீர் முஹம்மது
நன்றி : தினகரன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.