.

Pages

Tuesday, May 20, 2014

அதிரையில் AFFA நடத்தும் கால்பந்தாட்ட போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் நாகூர் அணியினர் அபார வெற்றி !


அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று [ 20-05-2014 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரோடு நாகூர் அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 3 கோல் அடித்து  நாகூர் அணியினர் வெற்றிபெற்றனர். ஆட்டத்தின் முதல் பாதியில் முதல் கோலை நாகூர் அணியின் நட்சத்திர வீரர் சிராஜ் அடித்தார். நாகூர் அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் சேக் ஹுசைன் ஆட்டத்தின் மற்றொரு பாதியில் 2 கோல்களை அடித்து தனது அணி வெற்றி பெற உதவியாக இருந்தார்.

வழக்கம் போல் ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக லோட்டஸ் நெய்னா மற்றும் ராஜிக் அஹமது ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர். இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் அதிரை SMG அணியினரோடு, ஒரத்தநாடு அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.


கம்பிரமாக காட்சியளிக்கும் பட்டுக்கோட்டை அணியினர்




இந்த ஆட்டத்தின் நட்சத்திர வீரராக ஜொலித்த நாகூர் அணியின் கோல் கீப்பர் நியாஸ் அஹமது

முதல் கோல் அடித்த சிராஜ்

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. நல்ல விளையாடுங்க, நாட்டு முட்டை குடிங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.