அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று [ 20-05-2014 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
இன்றைய ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரோடு நாகூர் அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 3 கோல் அடித்து நாகூர் அணியினர் வெற்றிபெற்றனர். ஆட்டத்தின் முதல் பாதியில் முதல் கோலை நாகூர் அணியின் நட்சத்திர வீரர் சிராஜ் அடித்தார். நாகூர் அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் சேக் ஹுசைன் ஆட்டத்தின் மற்றொரு பாதியில் 2 கோல்களை அடித்து தனது அணி வெற்றி பெற உதவியாக இருந்தார்.
வழக்கம் போல் ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக லோட்டஸ் நெய்னா மற்றும் ராஜிக் அஹமது ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர். இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் அதிரை SMG அணியினரோடு, ஒரத்தநாடு அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
நல்ல விளையாடுங்க, நாட்டு முட்டை குடிங்க.
ReplyDelete