.

Pages

Saturday, May 31, 2014

குடிநீர் வினியோகம் கேட்டு காலிகுடங்களுடன் வீதியில் பெண்கள் !

அதிரை அருகில் உள்ள ஏரிபுறக்கரை கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட 4 வது வார்டு ( குப்பம்  ) பகுதிகளில் சுமார் 300 பேர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் பற்றாக்குறையாக இருப்பதால் பெண்கள் காலிகுடங்களுடன் வீதிகளில் உலா வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் நம்மிடம் கூறுகையில்...
கடலோரப்பகுதியான எங்கள் பகுதியில் கடந்த 6 மாதமாக போதுமான குடிநீர் வழங்குவது கிடையாது. 1 கிலோ மீட்டர் தொலைவில் சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். மிகவும் சிரமமாக இருக்கிறது. சம்பந்தபட்ட ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள்  பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தவறினால் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறுகின்றனர்.


4 comments:

  1. அதிரை மற்றும் அதிரை சுற்றியுள்ள பகுதியில் நாளுக்கு நாள் தண்ணீர் பற்றாக்குறையை காண முடிகிறது.குளங்கள்,ஏரிகளில் தண்ணீர் இல்லாததை காண முடிகிறது.

    முதலில் தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து தலைவர்களும் அரசங்காத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன் அதுமட்டுமல்லாமல்,கடற்கரை பக்கம் இருந்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை பொதுமக்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய தருணத்தில் நாம் இருகின்றோம்.

    எத்தனை தடவை ஊர்காரர்கள் கூட்டம் போட்டு நடத்தினாலும் மின் ஊரிஞ்சி மோட்டார் இருக்கும் வரை,தண்ணீர் பஞ்சம் ஓயாது என்பதே தெளிவாக தெரிகிறது.

    தண்ணீர் சிக்கம் தேவை இக்கணத்தினை கருத்தில் கொள்ள கடமைபட்டுள்ளோம்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    அதிரையின் பல வார்டுகளில் சரியாக குடிநீர் விநியோகம் கிடையாது.

    குறிப்பாக 21 வார்டு சி.எம்.பி லைன் மற்றும் இதன் வடக்கு பகுத்யான அம்பேத்கார் நகர் முழுக்க இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் கிடையாது. வார்டு மெம்பர் இப்ராஹீம் அவர்கள் ஏதோதோ காரணம் சொல்லி அப்பகுதி குடியிருப்புமார்களை சமாளித்து வருகின்றார்.

    குறிப்பு:- அதிரையில் பதவியில் இருப்பவர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் நகர் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லையாம். இது அப்பகுதி மக்களின் ஆதங்கம்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. குடிதண்ணீர் பிரச்னைக்கு விடிவே கிடையாதா?

    ReplyDelete
  4. Yes save used water in back yard and rain water ......
    Then insa allah we will get water level

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.