.

Pages

Saturday, May 24, 2014

10ம் வகுப்பு தேர்வில் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி மாணவிகள் சாதனை !

அதிரை அருகே உள்ள முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல் நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் 118 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி பால சுந்தரி 496 மார்க் எடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மேலும் மாணவி தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணக்கில் 98, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 மொத்தம் 496 மார்க் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாகவும் தேர்ச்சி பெற்றுள்ளார். அதே போல் மாணவி காவியா தமிழில் 97, ஆங்கிலத்தில் 98, கணக்கில் 99, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 மொத்தம் 494 மார்க் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடமும,; அதே போல் சஃபா பர்வின் தமிழியில் 95, ஆங்கிலத்தில் 98, கணக்கில் 98, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 மொத்தம் 491 மார்க் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளியின் முதல்வர் சகுந்தலா மற்றும் ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாணவி காவியா

மாணவி பாலசுந்தரி

நன்றி : 'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை

5 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    நல்வாழ்த்துக்கள்.
    நன்றாக படித்ததற்கான இந்த பரிசு.

    இன்னும் படி.
    முதலாவதாக படி.
    விட முயற்சியுடன் படி.
    நம்பிக்கையுடன் படி.
    வெற்றி தொடரும்படி படி.
    அனைத்தும் உன் உள்ளப்படி படி.
    வாழ்த்தும்படி படி.
    இவ்வையகம் போற்றும்படி படி.

    CONGRATULATIONS!
    “Some people just dream of success… while others wake up and work hard at it”
    Your hard and hand works are evident from your result I am proud of you.
    மக்களுக்கு சேவைகள் பல ஆற்றிட வாழ்த்தி பாராட்டுகின்றேன்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. இவ்மாணவிகளை வையகம் போற்ற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிரைநியூஸின் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.