.

Pages

Saturday, May 31, 2014

ஜமாபந்தி : அதிரையர் பயன்படுத்திக்கொள்ள அறிய வாய்ப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 4-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஜமாபந்தி ஜூன் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர நாள்தோறும் காலை 9 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. பட்டுக்கோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்த ஜமாபந்தியில் நில உடைமையாளர்கள் பட்டா மாறுதல், நிலங்கள் குறித்த எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், பொதுமக்கள் வீட்டுமனை, சாகுபடி நில ஒப்படை, முதியோர் உதவித்தொகை பெறுதல் ஆகிய கோரிக்கைகள் குறித்தும் வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு கொடுத்து தீர்வு பெறலாம். வருவாய் தீர்வாயத்தின் நிறைவு நாளில் அந்தந்த வட்டங்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் விவசாயிகள், பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறை, புள்ளியியல் துறை சார்ந்த உள்கோட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடத்தப்படும். இதில், பாசனம் தொடர்பான கருத்துரு, முன்மொழிவுகள், கோரிக்கைகள் ஆகியவற்றை அளிக்கலாம்.

2 comments:

  1. இனியெல்லாம் மக்களுக்கு நல்லதே நடந்த வண்ணம் இருக்கும்.

    ReplyDelete
  2. mr.புரட்சி மின்னல் .. அம்மா திட்டம் போல இருக்கும் போல.. நாங்களும் கொடுத்தோம்.. இதுவரை பட்டாமாறுதலுக்கு விடை இல்லை ... லஞ்சம் இல்லாமல் வேலை இல்லை ...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.