.

Pages

Saturday, May 31, 2014

தஞ்சை எம்பி அதிரையில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு !

தமிழக முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமாகிய செல்வி. செயலலிதாவின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கு. பரசுராமன் இன்று காலையில் அதிரையில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கட்சியினர் எம்.பி.க்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதில் வேட்பாளரோடு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மலை அய்யன், அதிமுக கட்சியின் நகர கிளையின் பொறுப்பாளர்கள் - வார்டு செயலாளர்கள், பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர்.





3 comments:

  1. அதிரைக்கு சுகாதரம்,தண்ணீர்,அகல இரயில் பாதை,தஞ்சையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை தரமான சாலை இதுபோன்ற பல திட்டங்களை அதிரைக்கு செய்வீர்களா ?செய்வீர்களா ? அம்மாவின் மைன்ட்வாயில் இருந்து.............

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    எங்களுக்கு நன்றியா, உங்களுக்கும் எங்கள் நன்றி. உங்களின் வாக்குறுதிகளை தாமதிக்காமல் நிறைவேற்றுங்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. பகலு அஜீஸ் வீட்டில் நல்ல சாப்பாடாமே, ஒரே அசத்தலாம்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.