.

Pages

Thursday, May 29, 2014

முத்துப்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவரது கை துண்டானது !

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சின்னாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த முத்தைய்யன் மனைவி மாரியாயி(80) நேற்று முன் தினம் இறந்து விட்டார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த சிங்கார் மகன் பத்மநாதன்(48) என்பவர் கலந்து கொண்டு இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி குண்டுகளை வெடித்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக இவரது வலது கையில் பட்டு வெடித்ததில் வலது கை சிதறி துண்டானது, பலத்த காயம் அடைந்த பத்மநாதனை தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி : 'நிருபர்' முத்துபேட்டை மொய்தீன் பிச்சை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.