.

Pages

Saturday, May 17, 2014

அதிரையர் செலுத்திய வாக்கு யாருக்கு ? துல்லியமாக கணித்து சொன்ன அதிரை நியூஸ் ரிப்போர்ட் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 21 வார்டுகளில் உள்ள 22,856 வாக்குகளில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 14,513 என்றும், இது சதவீதத்தில் 62.7 என்றும் கூறியிருந்ததோடு மட்டுமல்லாமல் வாக்கு பதிவின் போது அதிரையின் முக்கிய பகுதிகளில் வலம் வந்த அதிரை நியூஸ் குழுவினர் நேரடியாக சென்று திரட்டப்பட்ட தகவல், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அதிரையில் பதிவான வாக்குகளில் எந்த கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பதை அலசி ஆராய்ந்து

'அதிரையில் எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெரும் ? Exclusive ரிப்போர்ட் !'

என்ற தலைப்பில் அனுபவமிக்க நடுநிலையான செய்தியாளர்களை கொண்டு கடந்த [ 25-04-2014 ] அன்று அதிரை நியூஸ் இணையதளத்தில் தொகுத்து வழங்கியிருந்தோம்.

இதில் நாம் கூறியிருந்த ரிப்போர்ட் அனைத்தும் உண்மை என நிருபிக்கும் விதத்தில் நேற்று எண்ணப்பட்ட வாக்குகளில் அதிரையர்கள் ஒவ்வொரு கட்சிகளுக்கும் வழங்கியுள்ள வாக்குகள் ஒத்துக்காணப்படுவது நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதிரையர்கள் ஒவ்வொரு கட்சிகளுக்கும் வழங்கியுள்ள மொத்த வாக்குகள்...

திமுக  7614
அதிமுக 4238
காங்கிரஸ் 1041
பிஜேபி 1244
கம்யூனிஸ்ட் 142
நோட்டோ 127
மற்றவருக்கு 79

இனிவரும் பதிவுகளில் அதிரையில் உள்ள எந்த பகுதிகள் எந்த கட்சிகளுக்கு அதிக வாக்குகளை செலுத்தியுள்ளனர் என்பதை பார்ப்போம்.

அதிரை நியூஸ் குழுவினர்

10 comments:

  1. நெருக்கமான கணிப்பு. சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உண்மையாக நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கணித்து சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும்.

    ReplyDelete
  3. நெருக்கமான கணிப்பு. சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நெருக்கமான கணிப்பு. சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இது தேவையில்லாத வேலை; அரசியலாரின் கண்களில் பட்டால் பாகுபாடு பார்ப்பர்.

    ReplyDelete
  6. சாதுர்யம், சதார்தம் இவைகளைபோலே அதிரை நியூசும் ஒன்று, கருத்து கணிப்பு சொல்ல எவராலும் முடியாது,

    ReplyDelete
  7. முஸ்லிம்கள் திமுகவுக்கு விசுவாசமாகவும், சமுதாயத்திற்கு நலன் வேண்டியும் வாக்களித்த வேளையில், திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறியது ஏன்? இனியும் இந்தக் கூட்டணிகள் வேண்டா. வெற்றியோ, தோல்வியோ தனித்து ஒரே குடையில் வரும் வரை இப்படிப் புலம்பிக்கொண்டே இருப்பது தான் விதியா? அல்லது தேர்தலில் நிற்காமல் ராஜ்ய சபாவுக்கு சீட் கேட்டு விட்டு ஒத்துழைக்கலாம், அல்லது அரசியலுக்கும் சீட் வெல்வதற்கும் உண்மை, நேர்மை, கூட்டணி தர்மம் எல்லாம் இந்தக் காலத்தில் எடுபடாது என்று தெரிந்து கொண்டதால் ஒதுங்கிக் கொண்டு சும்மா இருந்து விடலாம். இத்தனை உழைப்பும் வீணாகிவிட்டதே!

    ReplyDelete
    Replies
    1. ஒரு குடையின் கீழ் வராதவரை சிங்கம் மாடு கதைதான். அரசியலிலும் மாற்றம் வேண்டும்.

      Delete
  8. தேர்தல் நேரத்தில் தனது பங்களிப்பினை நேர்மையாக செய்த அதிரை நியூஸ் தளத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்., குடும்ப ஆட்சி , வாரிசு அக்கப்போர் , ஊழல் குற்றசாட்டு போன்றவை திமுகாவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

    2-G கதாநாயகி கனிமொழியை தேர்தல் பிரசாரத்திற்கு வந்தது, ஊழலின் குறிகோளாக தொழில் செய்யும் மாறனை தேர்தலில் நிறுத்தியது. வசூல் ராஜாவை தேர்தலில் நிறுத்தியது, ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் வார்த்தை காமெடிகள் இவைகள் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.

    காங்கிரஸ் இல்லாத DMK இனி எழுந்து நடப்பது கடினமே!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.