.

Pages

Wednesday, May 21, 2014

அதிரையில் AFFA நடத்தும் கால்பந்தாட்ட போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் ஒரத்தநாடு அணியினர் வெற்றி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று [ 21-05-2014 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரோடு ஒரத்தநாடு அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இதைதொடர்ந்து ட்ரைபிரேக்கர் வைக்கப்பட்டது. இதில் ஒரத்தநாடு அணியினர் வெற்றிபெற்றனர்.

வழக்கம் போல் ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக லோட்டஸ் நெய்னா மற்றும் ராஜிக் அஹமது ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர். இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் தஞ்சை நேதாஜி அணியினரோடு, சிவகங்கை அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.


கம்பிரமாக காட்சியளிக்கும் அதிரை SSMG அணியினர்





2 comments:

  1. விளையாட்டு வீரர்கள், வழி நடத்துவார்கள், இதை பதிவு செய்தவர்கள் அவைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  2. முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் ஆனால் முயற்சியே செய்யாமல் நேரடியாக வெற்றிபெற நினைத்தால் முடியுமா. தினமும் முறையாக பயிற்சி செய்தால் வெற்றிபெறலாம். கால்பந்து விளையாட்டு வீரர்களை ஊக்கவிக்க நமதூரில் சரியான ஆட்கள் இல்லாமல் போய்விட்டது. இது தான் உண்மை. SSMG அணியே சரியாக வழிநடத்தி செல்ல ஆட்கள் இல்லை. வரும் காலத்தில் SSMG அணியே வழி நடத்தி செல்ல சரியான ஆட்கள் இருந்தால் நமது அணி வெற்றி கோப்பையே வெல்ல வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.