.

Pages

Monday, September 1, 2014

கடற்கரைதெரு 8 வது வார்டு இடைதேர்தல் நிலவரம் ! Exclusive ரிப்போர்ட் !!

கடற்கரைதெருவை சேர்ந்த அதிரை பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினருமாகிய மர்ஹூம் KSA சாகுல் ஹமீது அவர்கள் கடந்த 17-04-2014 அன்று காலமானதை அடுத்து 8 வது வார்டு உறுப்பினர் பணியிடம் காலியாகவே இருந்து வந்தது.

தஞ்சை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களால் 2014–ம் ஆண்டு ஏப்ரல் 30–ந் தேதி வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 6 வட்டார ஊராட்சி வார்டு உறுப்பினர், 6 சிற்றூராட்சி தலைவர், 72 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தஞ்சை மாநகராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர், 6 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி வரும் 04–ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு வரும் 05ம் தேதி காலை 11 மணிக்கு எடுத்து கொள்ளப்படும். வேட்பு மனுக்களை விலக்கி கொள்வதற்கு 08–ம் தேதி மாலை 3 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 18–ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 22–ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும் எனவும், ஊரக பகுதிகளுக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், வட்டார ஊராட்சி வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், நகர்புற பகுதிகளுக்கு தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், பேரூராட்சி பகுதிகளுக்கு தொடர்புடைய பேருராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பை அடுத்து காலியாகவுள்ள கடற்கரைதெரு 8 வது வார்டு பகுதிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த 2 அல்லது 3 பேர்கள் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சென்ற முறை திமுக சார்பில் 8 வது வார்டில் போட்டியிட்டு சமநிலை வாக்குகளை பெற்று, டாஸ் முறையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட அன்சாரி அவர்கள் இந்த முறை போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இவரை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த இளைஞரான சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன் போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்பகுதியின் வார்டு செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளாராக இவரை கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இடைதேர்தலில் திமுக கட்சி இந்த முறை போட்டியிட வாய்ப்பில்லை என்ற கருத்து பரவலாக நிலவுதால் 8 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயட்சையாக போட்டியிடும் அன்சாரி ஆகிய இருவருக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவும் என பரவலாக பேசப்படுகிறது. இதில் சில நிபந்தனையின் அடிப்படையில் போட்டியின்றி வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் சார்பில் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் சுயட்சைகள் போட்டியிடும் தகவலும் இதுவரையில் தெரியவில்லை.

பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நாளை எதுவும் நடக்கலாம் :) 

17 comments:

  1. இன்ஷா அல்லாஹ் சேனா மூனா அவர்கள் வெற்றி பெற வேண்டும். காரணம் பொறுப்பு அறிந்து செயல்படக்கூடியவர்.

    ReplyDelete
  2. சேனா முனா வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கடந்த வாரம் ஆளும் கட்சியினர் இப்பகுதி மக்களுக்கு விலையில்லா பொருள்கள் அள்ளி அள்ளி கொடுத்த நோக்கமே இந்த இடை தேர்தல் தான்.

    இந்த வார்டில் யாருக்கு அதிகமா சொந்த பந்தங்கள் இருக்குதோ அவர் தான் வருவார் - இந்த நிலைமை தான் எல்லா வார்டிலும்.

    நேர்மையானவர், சமூக சிந்தனை உடையவர், தெரு முன்னேற்றத்தை அதிகமாக விரும்புவர் என்று சொள்ளக்கூடியவர்க்கு வாய்ப்பு குறைவு தான். அதனால தானே ஊரில் அதிக இடங்களில் குப்பை அல்லாமல் கிடக்குது.

    கேட்டா, ஆள் பற்றாக்குறை என்று சொல்லி தன்னை காப்பாற்றி கொள்கிறார் (மெம்பெர் ).

    புதியவர்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்து நாம் வேலை வாங்க வேண்டும்! - மாறுமா?

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    நான் பிறந்த மண் இந்த கடற் கரைத் தெரு. தற்போது நான் வடகோடியில் ‎வசித்து வந்தாலும், தென்கோடியில் நான் பிறந்த மண்ணில் ‎சுயேட்ச்சையாக நிற்கலாம் என்று இருக்கின்றேன்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் கட்சிகாரங்க வூடு தேடி வந்துருவாங்க... பேச்சுவார்த்தை நடத்த :)

      Delete
    2. தென்கோடியில் பிறந்து வடகோடியில் ‎வசித்து வந்தாலும் கையில் கோடியுடன் அரசியலில் போட்டி இட்டால் வெற்றி நிச்சயம். - வாழ்த்துக்கள்

      Delete
    3. ஜமாலாக்கவுக்கும் ஆச வந்துடிச்சி. அதெ நெர வேத்திடுங்க காக்கா

      Delete
    4. மனித உரிமை காவலர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்கள் ஒரு முன்மாதிரியைக் காட்டலாமே. வாய்ப்புக்கள் வாய்க்க வாழ்த்துக்கள்.

      Delete
  5. இன்ஷா அல்லாஹ்... சகோதரர் சேனா முனா என்கிற (ஹாஜா முகைதீன்) வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சேனா மூனாவிற்க்காக அம்மாவுடய்தட்க்ஷ்னயாக விலையில்லா பொருட்களும் வீதியில் வழம்வந்துவிட்டது அதிரைஉபையத்து அப்துல்மாலிக் போன்றவர் வாழ்த்தியும்மாகிவிட்டச்சி இன்னும் அம்மாவுடைய கால்லடி தர்ஷனம்தான் பாக்கி!...

    ReplyDelete
  7. என் தாயார் பிறந்த மண் இந்த கடற் கரைத் தெரு. தற்போது நாங்கள் கீழத்தெருவில் ‎வசித்து வந்தாலும், என் தொப்புள் கொடி உறவுகள் சுமார் 26 வீடுகளில் 192 வாட்காளர்கலாக வசிகிறார்கள் ‎சுயேட்ச்சையாக நிற்கலாம் என்று இருக்கின்றேன் இருந்த போதிலும் என் அன்பு நண்பர் சேனாமுனா மற்றும் அன்பு சகோதரர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்களுக்க மேலும் எனக்கு அரசியல் அனுபவம் வேண்டி தேர்தல் கலத்திலிருந்து பார்வையாளர்களாக இருப்பேன்.


    அன்புடன.
    மான்.A.ஷேக்
    Human Rights.
    Thanjavur District. Adirampattinam-614701

    ReplyDelete
  8. ஜமால் காக்கா, என்ன இதுக்கு போய் ஆசைபடுறீங்க! நீங்க கன்ஸ்யூமர் ‎அண்டு ஹுயூமன் ரைட்ஸ் என்ற அமைப்பில் இருந்துக் கொண்டு சமூக ‎வேலைகளை செய்து வருகின்றீர்கள், இது போதும் காக்கா உங்களுக்கு.‎

    இந்த மெம்பர் வேலை உங்கள் பெயரை கெடுத்துவிடும், நீங்க பண்ணுற ‎எல்லா வேலைகளும் தொலைக்காட்ச்சி, இணையம், செய்தித்தாள் ‎இவைகளில் உங்களுடைய போடோவோடு செய்திகள் வரும் காக்கா.‎

    பிறகு நீங்க காலில் விழுகிற போடவும் வரும்.‎

    நல்லா யோசனை பண்ணுங்க.‎

    ReplyDelete
  9. //கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMED.1 September 2014 15:27
    பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    நான் பிறந்த மண் இந்த கடற் கரைத் தெரு. தற்போது நான் வடகோடியில் ‎வசித்து வந்தாலும், தென்கோடியில் நான் பிறந்த மண்ணில் ‎சுயேட்ச்சையாக நிற்கலாம் என்று இருக்கின்றேன்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.கம//

    இந்த பதிவில் கருத்து இட்ட 13 பேர்களில் 5 பேர்களுக்கு மேல் சகோ .சேனா முனாவை ஆதரிப்பதாக தெரிகிறதே .....மக்கள் நலம் காக்க மக்கள் பிரதி நித்துவம் அவசியமான ஒன்றே ....செயல் மிக்கவரை தேர்ந்தெடுப்பது மக்களின் உரிமை அதை யாரும் வீணாக்கி விடவேண்டாம் .

    ReplyDelete
  10. சேனா முனா வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. Machan Sean Nina vetri pera dua seigiren

    ReplyDelete
  12. வேட்பாளர்களில்யாரிடம்குப்பைவண்டியும்குப்பைஅள்ள ஆட்களும்உண்டோஅவருக்கேஎங்கள்ஒட்டு.இல்லைஎன்றால் வண்டியேஓட்டு!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.