.

Pages

Wednesday, September 3, 2014

ராஜாமடம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நல உதவிகள் !

பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில், அதிரையை அடுத்து உள்ள ராஜாமடம் ராஜா சரபோஜி மன்னர் மடத்தில் உள்ள ராமகிருஷ்ணா சாரதா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கோட்டை ரோட்டரி சங்கத்தலைவர் பொறியாளர் ஏ.ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் எம்.சுந்தரமூர்த்தி வரவேற்றார்.ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் ஜி.தேவசகாயம், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் ஆர்.ஆத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆதரவற்ற குழந்தைகள் சுமார் 32 பேருக்கு பயன்படும் வகையில் 35 பாய், 33 போர்வை, 33 டவல், சோப், சீப்பு, எண்ணெய் பாட்டில், நோட் புக், மளிகைப்பொருட்கள், அரிசி 500 கிலோ மற்றும் வாலிபால், புட்பால், ரிங்பால்,கிரைண்டிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜி.ஜெயசீலன், ஏ.கண்ணன், எம்.வீரபத்ரன், வி.ஜெயேந்திரன், ஏ.திருமுருகன், ஆர்.எம்.குமரன், வி.சுரேஷ், எஸ்.எம்.டி.ராஜா, ஏ.தாமஸ் ஆரோக்கியராஜ், பொன் சங்கரன், கிக்காராம் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.காப்பக பொறுப்பாளர் ஆர்.எஸ்.மணிவண்ணன் நன்றி கூறினார்.

செய்தி : எஸ்.ஜகுபர் அலி,
பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.