.

Pages

Tuesday, September 30, 2014

தீர்ப்பு எதிரொலி : அதிரையர் ஆற்றில் குதித்து தற்கொலை !

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிரை பேரூராட்சியை சேர்ந்த அ.தி.மு.க.வினரும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடைய இருந்த நேரத்தில் அதிரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் M. மணி (வயது45), அதிரை பேரூராட்சி கவுன்சிலர் உதயகுமார், முருகானந்தம், சபியுல்லா ஆகிய 4 பேர் அங்கிருந்து எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள புதுஆற்றுபாலத்திற்கு வந்தனர்.

அப்போது M. மணி ஆற்றின் பாலத்தின் தடுப்புசுவர் மீது ஏறி, ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும். ஜெயலலிதா வாழ்க என்று கோஷமிட்டபடி ஆற்றில் குதித்தார். உடனே உடன் வந்த மற்ற 3 பேரும் அவரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்தனர். மேலும் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தவர்களும் ஆற்றில் குதித்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் மாமணியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

2 comments:

  1. தமிழன் ஒரு காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது, தீக்குளிக்க முயற்சிக்கும் அடிமைகளே, அம்மாவால வசதியும் வாழ்க்கையும் பெற்றவங்களே அமைச்சர் பதவியை கமுக்கமா வட்சிக்கிறாங்க , யாரவது பதவி வேணாம்முன்னு சொன்னாங்களா? உங்களுக்கு என்னவந்தது?

    அறியாமையால் தன்னை மாய்த்த்துகொண்டவர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  2. நான் ஊரில் இருக்கும் போது எனது வீடுகளுக்கு செண்டரிங் கட்ட பெரும்பாலும் மணி அவர்களே அதிகம் வந்து வேலை செய்வார் ஒரு கை சற்றே முடியாமலும் தன் நம்பிக்கையுடன் வேலை செய்பவர் ...அன்னாரின் குடும்பத்தாருக்கு அதிரை வலைதள மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.