.

Pages

Sunday, September 14, 2014

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தேர்தல் ! வெளியூர்வாழ் அதிரையர்களின் அன்பான வேண்டுகோள் !!

அதிரையின் மிகவும் பழமை வாய்ந்த சங்கங்களில் ஒன்று சம்சுல் இஸ்லாம் சங்கம். இந்த சங்கம் விரைவில் நூறாண்டுகளை எட்ட இருக்கிறது. இந்நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நாளை [ 15-09-2014 ] நடைபெற உள்ள கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட ஏராளமானோர் தொழில் நிமித்தமாக வெளியூர்களில் வசித்து வருவதால். தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சங்க நிர்வாகிகளுக்கு விடுத்துள்ளனர்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகத்திற்கு தேர்தல் நடத்த இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம், அதற்கு நம் முன்னோர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி இவை யாவும் போற்றுதலுக்குரியவை, எல்லா புகழும் அல்லாஹ்விற்கே !

இந்த தேர்தல் நடத்துவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை , என்ற போதிலும் குறுகிய கால அவகாசத்தில் அறிவித்த, அதுவும், வெளி ஊர்களில் வர்த்தக நோக்கத்திற்காக வந்திருக்கும் எங்களை புறக்கணித்து இத்தேர்தலை நடுத்துவது எவ்வித்தில் நியாமாக இருக்கும் ? சொந்த ஊரை விட்டுவிட்டு, தனது குடும்ப நலனிற்காகவும் , தனது தேவை போக அவரர்களின் வசதிற்கேற்ப ஊர் நலனுக்காக எத்தனையோ நல்ல உள்ளம் கொண்டோர் பொருளாதாரத்தை செலவு செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. ஒரு சாராரை புறம் தள்ளிவிட்டு  இத்தேர்தல் நடத்துவதில் எங்களுக்கு  உடன்பாடில்லை, இதற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் , இணங்கி செயல் படக்கூடாது என்பது எங்களின் அன்பான வேண்டுகோள். நம் சகோதரர்கள், வெளி நாடுகளில் தியாகம் செய்து உழைத்து வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இத்தேர்தலை வரும் டிசம்பர் மாத இறுதியில் நடத்துவதில் எவ்வித சிரமமும் இருக்காது.  இதன் அடிப்படையில் சென்னை மற்றும் வெளியூர் வாழும் அதிரை மக்கள் சார்பாக இந்த கோரிக்கையை உங்கள் கவனத்திற்கு அவசர, மற்றும் அவசிய கோரிக்கையாக  சமர்பிற்கின்றோம்.  எல்லோருக்கும் பொதுவான சங்கம் நியாமான முடிவை அறிவிக்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

4 comments:

  1. அடுத்து மே மாதம் தள்ளிபபோக வாய்ப்பு வறும்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    விருப்பப்பட்ட எல்லா உள்ளங்களையும் மதித்து, அவர்களின் உணர்வுகளை ‎ஒருங்கிணைத்து, ஒத்து நின்று அதன்படி இந்த தேர்தலை சம்சுல் ‎இஸ்லாம் சங்கம் நடத்தும் என்று நம்புகின்றேன். ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. வாக்குகளை நழுவவிடாமல், எல்லா வாக்குகளையும் அரவணைத்து ‎தேர்தலை நடத்தினால் நல்லது.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    By:-‎
    JMMA International General Consultancy & Services.‎
    All kind of documents work.‎
    Web Designing.‎
    Flight Ticket Booking.‎
    All India Railway Ticket Booking.‎

    For any other enquiry, please contact us.‎
    jmmaigcs@gmail.com ‎

    ReplyDelete
  4. அதிரை பைத்துல்மால் போன்று இவர்களின் மக்கள் நலன்கள் மாதாந்திர அறிக்கையில் விளம்பரம் செய்யப்படவேண்டும் ....மேலும் இந்த சங்கத்தின் ஒரு சில குறிப்பிட்ட கும்பதாரின் தலைமை மற்றும் ஆளுமைகள் மாற்றி அமைக்கப்படவேண்டும் .

    வெளிநாடு வாழ் சங்க வாசிகளுக்கும் ஓட்டு உரிமை வழங்கபடவேண்டும் ..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.