வனவிலங்குகளுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிரை அலையாத்தி காடு வழியாக செல்லும் ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டுமென வனத்துறைக்கு மறவக்காடு அலையாத்தி காடு பாதுகாப்பு சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். வனத்துறைக்கு மறவக்காடு அலையாத்தி காடுகள் சங்க தலைவர் சங்கர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
அதிரை பகுதியில் அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. இக்காட்டில் நரி, காட்டுப்பன்றி, காட்டு முயல் மற்றும் பல விதமான பறவைகள், பழந்திண்ணி பெரிய வவ்வால் கள், பாம்புகள் வாழ்ந்து வருகிறது.
கோடை காலத்தில் காட்டில் உள்ள நீர்நிலைகள் வற்றி விடுவதால் வனவிலங்குகள் குடிதண்ணீர் இல்லாமல் காட்டை விட்டு நீர்நிலைகள் உள்ள பகுதிக்கு செல்கிறது. அப்படி வனவிலங்குகள் செல்லும்போது வாகன விபத்தில் சிக்கி கொள்கிறது. ஆதலால் அதிரை அலையாத்தி காடுகள் வழியாக நசுவினி ஆறு, பாட்டுவநாச்சியாறு ஆகிய ஆறுகள் மழை காலங்களில் அதிக தண்ணீருடன் கடலில் கலக்கிறது. ஆதலால் இரண்டு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் கோடை காலத்தில் ஆற்றில் தண்ணீர் தேங்கி இருக்கும்.
அலையாத்தி காட்டில் நீர் நிலைகள் வற்றினால் காட்டில் உள்ள வன விலங்கு, பறவைகளுக்கு குடி நீராக பயன்படும் வனவிலங்குகள் கோடைகாலத் தில் காட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும். அதனால் அதிரை அலையாத்தி காடுகள் வழியாக செல்லும் நசுவினி ஆறு, பாட்டுவாநாச்சியா ஆறு ஆகிய காட் டாறு குறுக்கே தடுப்பணை அமைத்து வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும்.
'நிருபர்' அதிரை செல்வகுமார்
எனக்கு தெரிந்த பார்வை குறைந்த ஒரு அம்மையார் இக்காட்டின் வழியே சென்றவர் வீடு திரும்ப வில்லை கடைசியாக எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர் இறந்தார் என்று உறுதிசெய்யப்பட்டது , விலங்குகள் அதிகம் வாழும் காடு என்று சொல்லலாம்.
ReplyDeleteஇந்த இடத்தை பற்றி சொல்லிடீங்களா இனி அங்கே நில அபகரிப்பு நடக்கலாம் ..................
இந்த இடத்தில் தடுப்பணை கட்டினால் ஒருவேளை நம்ம ஊருக்கும் நல்லதுதானே..
ReplyDeleteBy:-
JMMA International General Consultancy & Services.
All kind of documents work.
Web Designing.
Flight Ticket Booking.
All India Railway Ticket Booking.
For any other enquiry, please contact us.
jmmaigcs@gmail.com
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
மனிதர்களைவிட மிருகங்களுக்கு தண்ணீர் மிக மிக அவசியம். தண்ணீர் இல்லையென்றால் அவைகளுக்கு பைத்தியம் பிடிக்கும் என்று சொல்வார்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com