.

Pages

Tuesday, September 2, 2014

மரைக்கா குளத்திற்கு வந்துகொண்டிருந்த தண்ணீர் வரத்தில் திடீர் தடை !

அதிரை பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளத்திற்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக நேற்று அதிகாலை முதல் ஆற்று நீர் வந்தடைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீருடன் காட்சியளித்த காட்டுக்குளத்தை பார்வையிட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதை அடுத்து சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக செக்கடி குளம் உள்ளிட்ட ஏனைய சில குளங்கள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் இருந்து வந்தது.

நேற்று காலை 11.30 மணி முதல் மரைக்கா குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முதல் தண்ணீர் தடையின்றி வந்துகொண்டிருந்த மரைக்கா குளத்திற்கு இன்று பிற்பகல் 2 மணிமுதல் திடீர் தடை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து நின்று விட்டது.

இந்த திடீர் தடைக்கு வாய்க்காலில் ஏதேனும் உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் திசை மாறி வேறு பகுதிக்கு செல்கிறதா ? என்பதை கண்டறிய அதிரை இளைஞர்கள் சிஎம்பி வாய்க்கால் வழியே பார்வையிட்டு வருகின்றனர். அதிரை பகுதிக்கு இன்னும் சில தினங்கள் கூடுதலாக கால அவகாசம்  இருந்த நிலையில் தண்ணீர் வரத்தில் திடீர் தடை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  

5 comments:

  1. தண்ணீர் கூட அரசியலும் வருவதால் அரசியல் தண்ணீரை நிறுத்தி விடுகிறது,சென்ற ஆண்டு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.

    ReplyDelete
  2. Please stop unnecessary comments .... let's wait water fill out. .. Thanks ...Please be patient for comments

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.