இதை அடுத்து சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக செக்கடி குளம் உள்ளிட்ட ஏனைய சில குளங்கள் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் இருந்து வந்தது.
நேற்று காலை 11.30 மணி முதல் மரைக்கா குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முதல் தண்ணீர் தடையின்றி வந்துகொண்டிருந்த மரைக்கா குளத்திற்கு இன்று பிற்பகல் 2 மணிமுதல் திடீர் தடை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து நின்று விட்டது.
இந்த திடீர் தடைக்கு வாய்க்காலில் ஏதேனும் உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் திசை மாறி வேறு பகுதிக்கு செல்கிறதா ? என்பதை கண்டறிய அதிரை இளைஞர்கள் சிஎம்பி வாய்க்கால் வழியே பார்வையிட்டு வருகின்றனர். அதிரை பகுதிக்கு இன்னும் சில தினங்கள் கூடுதலாக கால அவகாசம் இருந்த நிலையில் தண்ணீர் வரத்தில் திடீர் தடை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Please take the action
ReplyDeleteதண்ணீர் கூட அரசியலும் வருவதால் அரசியல் தண்ணீரை நிறுத்தி விடுகிறது,சென்ற ஆண்டு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.
ReplyDeletePlease stop unnecessary comments .... let's wait water fill out. .. Thanks ...Please be patient for comments
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDon't worry
ReplyDelete