இந்நிலையில் அதிரையில் பெய்த தொடர் மழையால் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது. ஆங்காங்கே தண்ணீரும் தேங்கி காணப்பட்டது. இது குறித்து பல்வேறு தரப்பினர் நெடுஞ்சாலை துறையினரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றனர். இதையடுத்து குண்டு குழியுமாக காட்சியளித்த பகுதியில் கிராவல் ஜல்லி போடப்பட்டது. அடுத்தடுத்து பெய்த தொடர் மழையால் மீண்டும் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிரை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில்,'தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையை 800 மீட்டர் தூரத்தில், 7 மீட்டர் அகலத்தில் மேம்படுத்தும் விதத்தில் சுமார் ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த [ 13-11-2014 ] அன்று டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், இதற்கான பணிகள் விரைவில் துவங்க இருக்கும் தகவலை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் நம்மிடம் தெரிவித்து இருந்தார்.
தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இந்த சாலையின் பணிகளை எவ்வித காலதாமதமின்றி துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் எல்லா வேலையும் நடக்கும் ஓட்டுக்காக. அரசியல் வாதிக்கும் அதிகாரிக்கும் அவர்கள் கடமை பற்றி தெரியாது பொதுமக்கள் தான் நினைவு படுத்தனும் போல. தரமான சாலைகள் போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? போட்ட ரோடு அடுத்த மழைக்கு காணாமல் போகும்.
ReplyDeleteநாம கோடு போட்டா தான் அவங்க ரோடு போடுவாங்க அதாங்க போராட்டம் நடத்தனும்.