டிசம்பர் 6,2014 பாபர் மஸ்ஜித் இடித்து 22 வருடங்களை நினைவுபடுத்துகிறது.இந்த தருணத்தில் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டுகின்றேன்.அப்பொழுது தான் நம்முடைய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஊறு விளைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.மேலும் அன்றைய பிரதமர் திரு.நரசிம்மராவ் அவர்கள் இந்த தேசத்திற்கு உறுதி அளித்தபடி மசூதி இருந்த இடத்திலேயே மீண்டும் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கின்றேன்.' என்ற வாசகம் கொண்ட அஞ்சல் அட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பும் பணியினை கடந்த 1 ந் தேதி முதல் தமிழகமெங்கும் தமுமுகவினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுக்கூரில் உள்ள அஞ்சலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் தமுமுகவின் அனைத்து நிர்வாகிகளும் ஜமாத்தார்கள், பொதுமக்கள், மாணவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், வர்த்தகர்களிடமிருந்து பெற்ற சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகளை அஞ்சல் செய்தார்கள்.
செய்தி மற்றும் படங்கள்:
தமுமுக மதுக்கூர்

Ethu muslemleak baane
ReplyDeleteanru sonnar muslem leak thalaivar
valka