.

Pages

Monday, December 1, 2014

அதிரையில் இன்று நிகழ இருந்த நகை கொள்ளையை தடுத்து நிறுத்திய மீரா முகைதீன் !

அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் பேபி ஜுவல்லரி என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஒரு நகைகடை உள்ளது இந்த கடையில் உரிமையாளர் வழக்கம் போல் இன்றும் காலை 10.30 மணிக்கு கடையை திறக்கும் போது தன்னிடம் உள்ள நகை மற்றும் கொலுசுகளை ஒரு பையில் எடுத்து வந்துள்ளார் இதை நோட்டமிட்ட முகமுடி அணிந்த இருவர் பைக்கில் வந்துள்ளனர். கடை அருகே பைக்கை நிறுத்தி அதில் ஒருவர் நகை பையை தூக்குவதற்கு முயற்சித்தபோது உரிமையாளர் சேகரின் சத்தத்தை கேட்டு பக்கத்தில் உள்ள பத்திரக்கடை உரிமையாளர் மீரா முகைதீன் ( தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை பொருளாராக பொறுப்பில் இருக்கிறார் ) கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது ஒருவன் பைக்கை எடுத்துக்கொண்டு நான்கு கடைகளுக்கு தள்ளி பைக்கை தயாராக வைத்துள்ளான் மற்றொருவனை மீரா முகைதீன் அடித்து கீழே தள்ளிவிட்டு அவனை பிடிக்க பாய்ந்தபோது கொள்ளையன் மறைந்து வைத்திருந்த அருவாளை எடுத்து மீரா முகைதீனை நோக்கி வெட்டுவதற்கு முயற்சித்தபோது இதை சற்றும் எதிர்பார்க்காத மீரா முகைதீன் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்தவுடன் எவ்வித காயமும் ஏற்படவில்லை கொள்ளையன் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தயாராக வைத்திருந்தருந்த பைக்கில் ஏறி தப்பிவிட்டான் இதில் கொள்ளையனிடம் இருந்து நகையை காப்பாற்றியதற்கு கடை உரிமையாளர் சேகர், மீரா முகைதீனை பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

TNTJ அதிரை கிளை 

8 comments:

  1. நம்மவர்கள் கையில் சிக்கி இருக்கணும் அவனின் நல்லி எழும்பு எல்லாம் கில்லி எறிந்திருப்பார்கள் நம் ஊர் சிங்கங்கள்!

    ReplyDelete
  2. மீராவின் துனிச்சலால் பல லட்சம் மதிப்பு நகைகள் மீட்கப்பட்டது.உங்கள் உதவியை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  3. உயிரை ஒரு பொருட்டாக கருதாமல் கொள்ளையனோடு போராடி கொள்ளையை தடுத்து நிறுத்திய தம்பி மீரா முகைதீனுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. புகைப்படத்தை நீக்குவது நல்லதாக கருதுகிறேன்

    ReplyDelete
  5. சகோதரர் மீரா முகைதீனின் துணிச்சல் பாராட்டப் பட வேண்டியவை.

    இந்த நிகழ்வு ஒரு தொடர் நிகழ்வாக நமதூரில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. காவல்துறையினர் அனைத்து முக்கிய இடங்களிலும் கண்காணிப்புக் கேமராவை வைக்க ஏற்ப்பாடு செய்தால் நல்லது.

    ReplyDelete
  6. மீராவின் துனிச்சலால் பல லட்சம் மதிப்பு நகைகள் மீட்கப்பட்டது.உங்கள் உதவியை பாராட்டுகிறேன்.

    Reply

    ReplyDelete
  7. நகைகடை உரிமையாளர்கள் இது விஷியங்களில் முன்னெச்சரிக்கை
    பாதுகாப்பு குறித்து கவன் தேவை, சகோதர் மீரா அவர்கள் எச்சரிக்கையாகதான் இரங்கி இருக்கவேண்டும் திருடனிடம் என்னவகையான ஆயிதம் என்பது அவசரமான வேளையில் யூகிக்க முடியாது அல்லவா? இருந்தபோதிலும் அல்லாஹ் பாதுகாத்தான் அல்ஹம்துரில்லாஹ்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.