.

Pages

Monday, December 8, 2014

என்.ஏ.எஸ் ஸார் இல்ல திருமணத்தில் அதிரையர் பங்கேற்பு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறை தலைவராக பணியாற்றியவர் பேராசிரியர் என் ஏ சாகுல் ஹமீது. என்.ஏ.எஸ் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஆகும். இவரோடு பணிபுரிந்த சக பேராசிரியர்கள், நண்பர்கள், மாணவர்கள் ஆகியோரிடத்தில் இன்முகத்துடன் பழகக்கூடியவர். தனது இல்லத்திருமண ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தவறாது தனது நட்பு வட்டத்தை அழைத்து மகிழ்வார்.

இவரது மகன் முஹம்மது அப்துல் காதர் மணமகனுக்கு நேற்று பனைக்குளத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர், முன்னாள் முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான அதிரைவாழ் நண்பர்கள் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தி மகிழ்ந்தனர். அதிரையிலிருந்து வந்திருந்த அனைவரையும் என்.ஏ.எஸ் ஸார் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.

2 comments:

  1. விட்டுக் கொடுங்கள்
    விருப்பங்கள் நிறைவேறும் !

    மனம் விட்டு பேசுங்கள்
    அன்பு பெருகும் !!

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள் - என்றென்றும்!

    முன்னாள் மாணவன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.