.

Pages

Wednesday, December 3, 2014

மழைக்காலங்களில் கப்ருகளில் தேங்கும் தண்ணீர் - மையித்துகளை அடக்கம் செய்வதில் ஏற்படும் சிரமங்கள்!

ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயமாக்கப்பட்ட ஒன்று அது எந்த நேரத்திலும், எந்த காலத்திலும்,எந்த சூழலிலும் வரலாம்.

மரணித்த மையித்துகளை சில மணிநேரங்களில் நாம் அடக்கம் செய்துவிடுகிறோம். இதில் எந்த சிரமமும் ஏற்படுவதில்லை.

ஆனால் மழைக்காலங்களில் மைய்ய வாடிகளில் 'கப்ர்' குழி தோண்டுவதிலிருந்து, மையித்துகளை அடக்கம் செய்வது வரை குழியில் தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் சிரமங்களை நாம் பல காலமாக கண்டு வருகிறோம்.

இவ்வருடம் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் இதே சிரமத்தை பல  மையித்துகளை  அடக்கம் செய்யும்போது உணர முடிந்தது.

இதனை தவிர்க்க ஏதேனும் வழி செய்ய வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர்.

இதற்காக தண்ணீர் புகாத தாற்காலிக டெண்ட் (கூடாரம்) பயன்படுத்தும் முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது.

அதாவது மழைக்காலங்களில், அல்லது தொடர் மழை பெய்துகொண்டு இருக்கும்போது, மையித் அடக்கம் செய்யும் சூழல் ஏற்படும்போது, இதுபோன்ற தாற்காலிக கூடாரங்களை உபயோகப்படுத்தலாம்.

அதன்படி ஒவ்வொரு மைய வாடிக்கு உரிய பள்ளிகளிலோ அல்லது மைய வாடிகளிலோ ஒரு பகுதியை உறுவாக்கி (டெண்ட் பாதுகாப்பாக இருக்க) அங்கேயே வைத்து மழைக்காலங்களில் மையித்துகளை அடக்கம் செய்யும்போது குழி வெட்டுவது முதல், அடக்கம் செய்வது வரை இந்த தற்காலிக கூடாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இதற்காக உள்ளூர் சமூக ஆர்வலர்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், மற்றும் ஊர் செல்வந்தர்களும் கலந்து ஆலோசித்து செயல்படுத்தலாம் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

2 comments:

  1. அவசியமான கோரிக்கை எனினும் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதல் படி அந்தந்த பள்ளிகளின் நிர்வாக கமிட்டியினர் இதற்குரிய முயற்சியில் இறங்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.