தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் சேர ஆன்லைனில் மனு செய்யும் வசதியும், 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி வசதியும் விரைவில் அறிமுகமாக உள்ளது.
சமூக நலத்துறை சார்பில் 35.65 லட்சம் பேருக்கு, இந்திரா காந்தி தேசிய வயது முதிர்ந்தோர் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், விதவையர் திட்டம் உள்ளிட்ட 8 சமூக பாதுகாப்புத் திட்டங்களில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க, இரு புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு உயரதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆட்சியில் தகுதியற்ற பலரை பயனாளிகளாகச் சேர்த்துள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டு, அவர்களை நீக்கி வருகிறோம். ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாக வெளியாகும் தகவல் தவறு. இத்திட்டங்களில் கடந்த ஜூன் முதல் 65 ஆயிரம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் மனு செய்தால் நிச்சயம் ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும், 10 இலக்க கட்டணமில்லா தொலைபேசி சேவையை தொடங்க உள்ளோம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதில் தொடர்பு கொண்டு விண்ணப்ப மனு எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மனு நிராகரிப்பு, ஓய்வூதியம் நிறுத்தம் ஆகியவற்றுக்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.
சமூக பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதனால் முதியோர், ஆதரவற்ற பெண்கள் தாலுகா அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும். இணைய வசதி இல்லாதவர்கள், பொது சேவை மையங்களுக்குச் சென்று இந்த வசதியை பெறலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல்: முஹம்மது ராவுத்தர்
சமூக நலத்துறை சார்பில் 35.65 லட்சம் பேருக்கு, இந்திரா காந்தி தேசிய வயது முதிர்ந்தோர் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், விதவையர் திட்டம் உள்ளிட்ட 8 சமூக பாதுகாப்புத் திட்டங்களில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க, இரு புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு உயரதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆட்சியில் தகுதியற்ற பலரை பயனாளிகளாகச் சேர்த்துள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டு, அவர்களை நீக்கி வருகிறோம். ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாக வெளியாகும் தகவல் தவறு. இத்திட்டங்களில் கடந்த ஜூன் முதல் 65 ஆயிரம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் மனு செய்தால் நிச்சயம் ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும், 10 இலக்க கட்டணமில்லா தொலைபேசி சேவையை தொடங்க உள்ளோம். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதில் தொடர்பு கொண்டு விண்ணப்ப மனு எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மனு நிராகரிப்பு, ஓய்வூதியம் நிறுத்தம் ஆகியவற்றுக்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.
சமூக பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதனால் முதியோர், ஆதரவற்ற பெண்கள் தாலுகா அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும். இணைய வசதி இல்லாதவர்கள், பொது சேவை மையங்களுக்குச் சென்று இந்த வசதியை பெறலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல்: முஹம்மது ராவுத்தர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.