அதிரை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் அனுமதி இல்லாமல் அப்பகுதி தனியார் தோப்புகளிலும், பாமினி ஆற்றிலும் மணல் எடுத்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் கீழக்காடு பகுதியில் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது பாமினி ஆற்றிலிருந்து இரண்டு டிராக்டர்கள் அனுமதி இல்லாமல் மணல் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன் போலீசார் மணல் கடத்தி வந்த இரண்டு டிராக்டர்களையும் கைப்பற்றி அதன் டிரைவர்கள் கீழநம்மங்குறிச்சியை சேர்ந்த பாலு, செருகளத்தூரை சேர்ந்த தண்டயுதபாணி ஆகியோரை கைது செய்தனர்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.