கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பால், இதிலிருந்து கழிவு நீர் வெளியேறி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியின் பிராதன சாலையில் ஓடிக்கொண்டிருந்த்தால் இப்பகுதியின் வார்த்தகர்கள் - குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். வெளியேறி வரும் கழிவுநீர் துர் நாற்றம் வீசி வருவதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் இன்று காலை அதிரை பேரூராட்சியின் சார்பில் துப்புரவு மேற்பார்வையாளர் நாடிமுத்துவின் மேற்பார்வையில் உடைந்த வடிகாலை சீர் செய்யும் பணிகளில் துப்புரவு பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். துரித நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சியை இப்பகுதியினர் பாராட்டினர்.






ஹலோ எங்க ஊர் தலைவரே!! இந்த 11வது வார்டு அதிரையில் தான் இருகின்றது (அதாவது உங்கள் தொகுதியில் தான் இருகின்றது தலைவரே) என்பதை உங்களுக்கு ஞாபகம் படுத்த வேண்டியதாக இருகின்றது.. அது என்னமோ உங்களுக்கு எங்கள் வார்டு கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. நாங்களும் எத்துனை தடவ தான் சார் உங்ககிட்ட வந்து முறையிடறது.
ReplyDeleteநீங்கள் தேர்தல் நேரத்தில் கூறியது போல், எங்களுக்கு சின்ன சிங்கபுரெல்லாம் ஆக்கவேணாம் கொஞ்சம் அந்த சாக்கடைக்கு தோண்டுன கல்லையும், சாக்கடையும், ரோடு போட்டு தந்து , தண்ணீர் பற்றாகுறை இல்லாமல் இருந்தாலே போதுமானது சார்.
இப்படிக்கு,
அப்துல் மாஜித்.