.

Pages

Tuesday, December 16, 2014

வங்கிக் கணக்கு: டிச.18-க்குள் தொடங்க அறிவுறுத்தல் !

பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் டிச. 18-ம் தேதிக்குள் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதமரின் மக்கள் நிதி திட்டத்தின் மூலம் குடும்பத்தினர் வங்கிக் கணக்குத் தொடங்கி வருகின்றனர். மாவட்டத்தில் இன்னும் வங்கிக் கணக்குத் தொடங்கப்படாமல் உள்ள குடும்பத்தினர் அருகிலுள்ள வங்கிக் கிளையை அல்லது வங்கிச் சேவகரை டிச. 18-ம் தேதிக்குள் அணுகி வங்கிக் கணக்குத் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்தக் கணக்குத் தொடங்குபவர்களுக்கு ரூ. 30,000-க்கு காப்பீடு செய்யப்படும். மத்திய அரசின் மானிய உதவிகள், நிதியுதவிகள் அந்தந்த வங்கிக் கணக்கின் மூலமாக நேரடியாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களும் வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டும் என்பதால், அவர்கள் பணம் செலுத்தாமலே கணக்குத் தொடங்கலாம். கணக்குத் தொடங்குவது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் முன்னோடி வங்கியின் தொலைபேசி எண் 04362 - 238798 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

1 comment:

  1. நல்ல திட்டம் தான் இதனை பயன்படுத்திக் கொள்வதோடு மற்றவார்களுக்கும் தெரியப் படுத்துவதும் நல்லது. இல்லையென்றால் இதனை (பேங்க் அக்கௌன்ட் ) பெற்று தர எஜன்ட் பணத்தை கரந்திடுவான், பிறகு மோசடி சம்பவம் நடக்கும்.

    பொது மக்களே உஷார்! உஷார்!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.