.

Pages

Sunday, December 14, 2014

TNTJ நடத்திய புற்றுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் !

முத்துப்பேட்டை ஆசாத்நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து புற்றுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. கிளை தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். முன்னால் மாவட்ட தலைவர் அன்சாரி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பிர்தொவ்ஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர.; இதில் அரசு மருத்துவர் அரவிந் குமார் கலந்துக்கொண்டு பொதுமக்களின் புற்றுநோய் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார. இதில் மருத்துவமனை செவிலியர்கள், தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். முடிவில் பள்ளி இமாம் ராஜிதீன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை

1 comment:

  1. கண்டிப்பாக பார்க்க கூடாது, கண்டிப்பாக கேட்க கூடாது, கண்டிப்பாக மனதளவில் எண்ணக்கூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் இதப் பற்றி கண்டிப்பாக பேசித்தான் ஆகணும், பெண்களை தாக்கும் உயிர் கொல்லி நோய் மார்பக கேன்சர் இதப் பற்றி போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பதால் நாடெங்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பலவிதமாக செய்கிறார்கள். பள்ளி ,கல்லுரி, பொது இடங்கள், மருத்துவ மனைகள் ஆகிய இடங்களில் பிரச்சாரங்கள் செய்யப் படுகிறது.
    ஆரம்பத்தில் சுய பரிசோதனை மேற்கொண்டால் இக்கொடிய நோய்லிருந்து பெண்கள் விடுபடலாம், அதனை எடுத்து சொல்லுவது கணவன்மார்களின் கடமை!

    நல்ல விழிப்புணர்வு நடத்திய TNTJ க்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.