.

Pages

Wednesday, March 29, 2017

அதிரையில் மஜக பொதுக்கூட்டம் அறிவிப்பு; 11 வது வார்டு கிளை நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-29
மனிதநேய ஜனநாயகக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெருவில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சி அதிரை பேரூர் செயலர் முகமது செல்லராஜா தலைமை வகித்தார். மஜக 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி எதிர்வரும் ( 21-04-2017 ) அன்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையத்தில் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ,  மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாருன் ரஷீது மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

அதிராம்பட்டினம் பேரூர் 11 வது வார்டு ( புதுத் தெரு பகுதி ) கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளராக இர்பாஃன், பொருளாளராக முபித் அஹமது, துணைச்செயளாலர்களாக சாதிக் பாட்சா, மஹாதிர், சரப் அஹமது, மாணவர் இந்தியா கிளைச் செயலாளராக தௌபிக் அஹமது, கிளை பொருளாளராக அப்துல் சமது ஆகியோர் ஏகனமதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாணவர் இந்தியா அமைப்பின் அதிரை பேரூர் செயலாளராக இப்ராஹீம் மஸ்தான்  தேர்வு செய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில் மஜக அதிரை பேரூர் பொருளாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது, குவைத் மண்டல ஊடகச் செயளாலர் அப்துல் சமது, துணைச்செயலாளர்கள் புரோஸ்கான் அப்துல் கனி  உட்பட மஜகவினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.