அதிரை நியூஸ்: மார்ச்-22
அமெரிக்கா, அலஸ்காவை சேர்ந்த உள்நாட்டு சேவை விமானம் ஒன்று பறந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் கேப்டனிடமிருந்து ஒரு அறிவிப்பு வருகிறது, விமானத்தின் முந்தைய பயணத்தில் பயணித்த ஒருவர் தன்னுடைய வளர்ப்பு பாம்பை விமானத்தில் மறந்துவிட்டுச் சென்றுள்ளார். எனவே பயணிகள் கவனமாக இருக்கவும் என எச்சரிக்கின்றார்.
கேப்டனின் எச்சரிக்கையை தொடர்ந்து உஷாரான சிறுவன் ஒருவனின் இருக்கையின் கீழ் அந்தப் பாம்பு சுகமாக உறங்கிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்து தெரிவித்ததை தொடர்ந்து, தூங்கு மூஞ்சிப் பாம்பு (Slumbering Snake) என பெயர் கொண்ட விஷதன்மையில்லாத அந்தப் பாம்பை விமானப் பணியாளர் ஒருவர் பிடித்து பை ஒன்றுக்குள் சிறைவைக்க, விமானம் எந்தத் தடங்கலும் இன்றி தொடர்ந்து பறந்து இலக்கை அடைந்துள்ளது.
இந்த பாம்பு பிடி சம்பவங்கள் அனைத்தையும் பயணிகள் பயப்படாமல் கூடிநின்று ரசித்ததும், அனுமதியில்லாமல் அந்தப் பயணி பாம்பை கொண்டு வந்ததுடன் அதை மறந்துவிட்டுச் சென்றதுடன் நில்லாமல் அதை முறையாக விமான நிலையத்திலும் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் ஹாஸ்யத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமெரிக்கா, அலஸ்காவை சேர்ந்த உள்நாட்டு சேவை விமானம் ஒன்று பறந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் கேப்டனிடமிருந்து ஒரு அறிவிப்பு வருகிறது, விமானத்தின் முந்தைய பயணத்தில் பயணித்த ஒருவர் தன்னுடைய வளர்ப்பு பாம்பை விமானத்தில் மறந்துவிட்டுச் சென்றுள்ளார். எனவே பயணிகள் கவனமாக இருக்கவும் என எச்சரிக்கின்றார்.
கேப்டனின் எச்சரிக்கையை தொடர்ந்து உஷாரான சிறுவன் ஒருவனின் இருக்கையின் கீழ் அந்தப் பாம்பு சுகமாக உறங்கிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்து தெரிவித்ததை தொடர்ந்து, தூங்கு மூஞ்சிப் பாம்பு (Slumbering Snake) என பெயர் கொண்ட விஷதன்மையில்லாத அந்தப் பாம்பை விமானப் பணியாளர் ஒருவர் பிடித்து பை ஒன்றுக்குள் சிறைவைக்க, விமானம் எந்தத் தடங்கலும் இன்றி தொடர்ந்து பறந்து இலக்கை அடைந்துள்ளது.
இந்த பாம்பு பிடி சம்பவங்கள் அனைத்தையும் பயணிகள் பயப்படாமல் கூடிநின்று ரசித்ததும், அனுமதியில்லாமல் அந்தப் பயணி பாம்பை கொண்டு வந்ததுடன் அதை மறந்துவிட்டுச் சென்றதுடன் நில்லாமல் அதை முறையாக விமான நிலையத்திலும் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் ஹாஸ்யத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.