.

Pages

Thursday, March 30, 2017

துபாய் போலீஸின் நேர்மை ! தனக்கு தானே தண்டனை விதிப்பு !

அதிரை நியூஸ்: மார்ச்-30
வளைகுடா நாடுகளில் குறிப்பாக துபை போக்குவரத்து போலீஸார் விதிகளை பின்பற்றுவது போல் பிறர் பின்பற்றுவது அரிதே. இவர்களின் கடந்தகால வரலாற்றில் சாலை விதிகளை மீறிய ஆட்சியாளர்களின் குடும்பத்தவரையே 'சட்டத்தை இயற்றிய நீங்களே மதிக்காவிட்டால் வேறு யார் மதிப்பார்?' என துணிவாக கேள்வியெழுப்ப அதற்கு அவர்கள் கட்டுப்பட்டு சென்றதும் அனைவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரி.

துபையில் சாலை ஓர பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த எகிப்திய மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான காரை எதிர்பாராவிதமாக போலீஸ் வாகனம் ஒன்று இடித்தது. அதிலிருந்த போலீஸ்காரர் 'கார்ப்போரல்' அப்துல்லாஹ் முஹமது இபுராஹீம் என்பவர் உடனடியாக விபத்து நேர்ந்தால் பிறருக்கு வழங்குவது போலவே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தனக்கு எதிரான ஒப்புகை சீட்டை சேதமடைந்த மருத்துவர் காரின் கண்ணாடி பகுதியில் வைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

ஓப்புகை சீட்டை படித்து விஷயமறிந்த எகிப்திய மருத்துவர் அந்த போலீஸாரின் நேர்மையை பாராட்டி சமூக வலைத்தளங்களில் செய்தியை பதிய வைரலானது. இந்த சமூக வலைத்தள செய்தி துபை போலீஸாரின் தலைமையகத்தை எட்ட, சம்மந்தப்பட்ட போலீஸ்காரர் மற்றும் எகிப்திய டாக்டர் ஆகியோரை அழைத்துப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியதுடன் கூடுதலாக போலீஸாருக்கு பதவி உயர்வையும் வழங்கியுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.