.

Pages

Tuesday, March 21, 2017

அதிரை பேரூர் 14வது வார்டில் மனிதநேய ஜனநாயகக் கட்சி புதிய கிளை துவக்கம் !

அதிராம்பட்டினம், மார்ச்-21
மனிதநேய ஜனநாயகக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சி அதிரை பேரூர் செயலர் முகமது செல்லராஜா தலைமை வகித்தார். இதில் அதிராம்பட்டினம் பேரூர் 14 வது வார்டு ( காலியார் தெரு பகுதி ) புதிய கிளை தொடங்கப்பட்டது. கிளைச் செயலாளராக ரியாஸ் அகமது, பொருளாளராக மஹ்ரூப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து பொருளாளர் சாகுல் எடுத்துரைத்தார். கிளை பொறுப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து குவைத் மண்டல ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அப்துல் சமது அறிவுரை வழங்கினார். புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மஜகவினர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.