வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி ரூ. 20 லட்சம் கொள்ளை
காரில் சென்ற வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு, ரூ. 20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை உள்ளது. இந்த கிளையின் மேலாளராக அரவிந்த் எஸ். குமார், காசாளராக ஆர்.சுப்பிரமணியன் உள்ளனர்.
இவர்கள் இருவரும் வியாழக்கிழமை காலை மல்லிப்பட்டினத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து நாட்டுச்சாலை வங்கிக் கிளைக்கு தேவையான ரூ. 20 லட்சத்தை ஒரு சூட்கேசில் வைத்து எடுத்துக் கொண்டு, வாடகை காரில் நாட்டுச்சாலை வங்கிக்கு கிளம்பினர்.
பிற்பகல் 1 மணியளவில் காசாங்காடு நடைபாலம் அருகே கார் வந்தபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் காரை மறித்து, வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு, ரூ. 20 லட்சம் இருந்த சூட்கேசை பறித்துக் கொண்டு தப்பி விட்டனராம். புகாரின் பேரில், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நன்றி: தினமணி
Very shocking incident... But Where is the official armed security guard personnel...???
ReplyDelete