.

Pages

Friday, March 31, 2017

அதிரை அருகே வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.20 லட்சம் கொள்ளை !

பட்டுக்கோட்டை, மார்ச்-31
வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி ரூ. 20 லட்சம் கொள்ளை

காரில் சென்ற வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு, ரூ. 20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த நாட்டுச்சாலை கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை உள்ளது. இந்த கிளையின் மேலாளராக அரவிந்த் எஸ். குமார், காசாளராக ஆர்.சுப்பிரமணியன் உள்ளனர்.

இவர்கள் இருவரும் வியாழக்கிழமை காலை மல்லிப்பட்டினத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து நாட்டுச்சாலை வங்கிக் கிளைக்கு தேவையான ரூ. 20 லட்சத்தை ஒரு சூட்கேசில் வைத்து எடுத்துக் கொண்டு, வாடகை காரில் நாட்டுச்சாலை வங்கிக்கு கிளம்பினர்.

பிற்பகல் 1 மணியளவில் காசாங்காடு நடைபாலம் அருகே கார் வந்தபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் காரை மறித்து, வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு, ரூ. 20 லட்சம் இருந்த சூட்கேசை பறித்துக் கொண்டு தப்பி விட்டனராம். புகாரின் பேரில், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

நன்றி: தினமணி

1 comment:

  1. Very shocking incident... But Where is the official armed security guard personnel...???

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.