.

Pages

Friday, March 24, 2017

அதிரையில் அதிகரிக்கும் திருட்டு: வர்த்தகர்கள், பொதுமக்கள் கலக்கம் !

அதிராம்பட்டினம், மார்ச்-24
அதிராம்பட்டினத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து செல்போன்- டேப்லட் கம்ப்யூட்டரை திருடிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து செல்போன்கள், நகைகள், பணத்தை திருடுவது, வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் பெட்ரோல் திருடுவது, கடைகளை உடைத்து பொருட்களை திருடிச்செல்வது, ஆடுகள் திருடுவது என அதிகரிக்கும் சம்பவங்களால் வர்த்தகர்கள், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் மர்மநபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து, அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன், டேப்லட் கம்ப்யூட்டர் ஆகியவற்றை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஹாஜா முகைதீன் கூறுகையில்;
அதிரையில் கடந்த மாதம் பிப்-22 ந் தேதி நள்ளிரவில் மாரியம்மாள் என்பவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த  திருடர்கள் உறங்கிக்கொண்டிருந்த மாரியம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்து பீரோ சாவியை பிடுங்கி பீரோவை திறந்து அதில் இருந்த சங்கிலி, மோதிரம் உட்பட 8 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்றனர். அதே போல் கடந்த வாரம் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஷோரூமில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஷோரூம் ஷட்டரை உடைத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பைக்கை திருடிச்சென்றனர்.

அதிராம்பட்டினம் பகுதிகளில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. காவல்துறையினர் இரவு நேரங்களில் வாகன ரோந்தில் ஈடுபட வேண்டும். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் நடமாடும் அறிமுகமில்லாத நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். தப்பிச்செல்லும் திருடர்களை பிடிக்க ஊர் எல்லைகளில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும்.மேலும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் குடியிருப்புதாரர்கள் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டு செல்ல வேண்டும்' என்றார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.