அதிரை நியூஸ்: மார்ச்-30
இந்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் அட்டை எனும் அடையாள அட்டையால் குடிமக்கள் நன்மையடைந்தார்களோ இல்லையோ கண்டிப்பாக விரக்தியும், தனிநபர் அந்தரங்க தகவல் சுதந்திர பாதுகாப்பின்மையும் அடைந்துள்ளனர். இதற்கு மிக மிக சமீபத்திய உதாரணம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் விபரங்கள் ஆதார் மையத்திலிருந்தே பொதுவெளியில் வெளியானது கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இருந்த, இருக்கின்ற மத்திய அரசுகள் உருப்படியாக திட்டமிடாததால் வண்டி வண்டியாய் ஆதார் குழப்பங்கள் குவிந்துள்ளன.
இந்திய சட்டப்படி 182 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்போர் வெளிநாடு வாழ் இந்தியர்களாக கருதப்படுவர். இத்தகையவர்கள் ஆதார் அட்டை எடுக்க உரிமையில்லை என்றும் அவர்களுக்கான உரிமைகள் சிறப்பு விலக்கின் (Exemption) அடிப்படையில் தொடர்ந்து கிடைக்கும் என விளக்கமளித்துள்ளனர்.
அதேவேளை ஏற்கனவே இந்நடைமுறை தெரியாமல் ஆதார் அட்டை எடுத்தவர்களின் நிலை குறித்து தெளிவு எதுவுமில்லாததுடன் எடுக்கப்பட்டுவிட்ட அந்த அட்டைகளை ரத்து செய்யவும் முடியாதாம். ஏனெனில் ஒருமுறை வெளியாகும் அந்த எண் நிரந்தரமானதாம். தெரிந்தோ, தெரியாமலோ ஆதார் அட்டை எடுத்த வெளிநாடுவாழ் இந்தியர்களை தண்டிக்கும் சட்டங்களும் ஏதுமில்லை என்றும் இந்திய அரசின் உயரதிகாரியான டாக்டர் அஜய் பூஷன் பாண்டே என்பவர் தெரிவித்துள்ளார். இவர் தான் ஆதார் அட்டைகளை வழங்கும் மத்திய அரசின் தனிப்பட்ட அடையாள அட்டைகளின் ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.CEO, Unique Identification Authority of India (UIDAI)
குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் என பொதுவாக எல்லோரையும் ஒரே கூண்டுக்குள் அடைக்காமல், இந்தியாவில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடுகளில் பணிபுரியும், 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறையே குடும்பத்தை சந்திக்கும் அவலங்கள் நிறைந்த தொழிலாளிகளையாவது 'வெளிநாடுவாழ் இந்திய தொழிலாளர்கள்' எனும் புதிய பட்டியலின் கொண்டு வர வேண்டும். மக்கள் நலன் பற்றி கவலைப்படும் அரசுகள் ஏதுமிருப்பின் கண்டிப்பாக செவிசாய்க்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
இந்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் அட்டை எனும் அடையாள அட்டையால் குடிமக்கள் நன்மையடைந்தார்களோ இல்லையோ கண்டிப்பாக விரக்தியும், தனிநபர் அந்தரங்க தகவல் சுதந்திர பாதுகாப்பின்மையும் அடைந்துள்ளனர். இதற்கு மிக மிக சமீபத்திய உதாரணம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் விபரங்கள் ஆதார் மையத்திலிருந்தே பொதுவெளியில் வெளியானது கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இருந்த, இருக்கின்ற மத்திய அரசுகள் உருப்படியாக திட்டமிடாததால் வண்டி வண்டியாய் ஆதார் குழப்பங்கள் குவிந்துள்ளன.
இந்திய சட்டப்படி 182 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் தொடர்ந்து வசிப்போர் வெளிநாடு வாழ் இந்தியர்களாக கருதப்படுவர். இத்தகையவர்கள் ஆதார் அட்டை எடுக்க உரிமையில்லை என்றும் அவர்களுக்கான உரிமைகள் சிறப்பு விலக்கின் (Exemption) அடிப்படையில் தொடர்ந்து கிடைக்கும் என விளக்கமளித்துள்ளனர்.
அதேவேளை ஏற்கனவே இந்நடைமுறை தெரியாமல் ஆதார் அட்டை எடுத்தவர்களின் நிலை குறித்து தெளிவு எதுவுமில்லாததுடன் எடுக்கப்பட்டுவிட்ட அந்த அட்டைகளை ரத்து செய்யவும் முடியாதாம். ஏனெனில் ஒருமுறை வெளியாகும் அந்த எண் நிரந்தரமானதாம். தெரிந்தோ, தெரியாமலோ ஆதார் அட்டை எடுத்த வெளிநாடுவாழ் இந்தியர்களை தண்டிக்கும் சட்டங்களும் ஏதுமில்லை என்றும் இந்திய அரசின் உயரதிகாரியான டாக்டர் அஜய் பூஷன் பாண்டே என்பவர் தெரிவித்துள்ளார். இவர் தான் ஆதார் அட்டைகளை வழங்கும் மத்திய அரசின் தனிப்பட்ட அடையாள அட்டைகளின் ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.CEO, Unique Identification Authority of India (UIDAI)
குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் என பொதுவாக எல்லோரையும் ஒரே கூண்டுக்குள் அடைக்காமல், இந்தியாவில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடுகளில் பணிபுரியும், 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறையே குடும்பத்தை சந்திக்கும் அவலங்கள் நிறைந்த தொழிலாளிகளையாவது 'வெளிநாடுவாழ் இந்திய தொழிலாளர்கள்' எனும் புதிய பட்டியலின் கொண்டு வர வேண்டும். மக்கள் நலன் பற்றி கவலைப்படும் அரசுகள் ஏதுமிருப்பின் கண்டிப்பாக செவிசாய்க்கும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.