.

Pages

Thursday, March 23, 2017

பேராவூரணியில் ஆறடி உயரத்தில் குலை தள்ளிய அதிசய வாழை !

பேராவூரணி மார்ச்.19-
பேராவூரணியில் 6 அடி உயரத்திற்கு குலை தள்ளிய அதிசய வாழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

பேராவூரணி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எதிரில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கு. இங்கு தலைமையாசிரியராக இருப்பவர் சித்ராதேவி. பள்ளி வளாகத்தில் சிறு மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருபவர்.

இதே பள்ளியில் உதவி ஆசிரியராக இருப்பவர் சுபாஷ். இவர் கடந்த ஜூன் மாதம் தனது சொந்த ஊரான நாகர்கோவிலில் இருந்து ஒரு வாழைக்கன்றை கொண்டு வந்து பள்ளி வளாகத்தில் நட்டு வைத்தார்.

இந்நிலையில் வளர்ந்த அந்த வாழைக்கன்று சில தினங்களுக்கு முன்பு பூ விட்டு குலை தள்ளியது. அந்த வாழைப்பூ மடல் விட்டு இப்பொழுது 6 அடி உயரத்தில் குலை தள்ளி உள்ளது. இந்த வாழைத்தாரில் தற்போது ஆயிரக்கணக்கான வாழைக்காய்கள் காய்த்து பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. வாழைப்பூ இன்னும் பூக்களுடன் தரையைத் தொட்ட வண்ணம் உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சுபாஷ் கூறுகையில், " ஊரிலிருந்து கொண்டு வந்து நட்ட இவ்வாழைக்கன்றுக்கென தண்ணீர் விட்டதோடு சரி. வேறு ஏதும் செயற்கை உரங்கள் போடவில்லை. இதன் தாய்க்கன்றும் இதே போல 6 அடி உயரத்தில் குலை தள்ளி, ஆயிரக்கணக்கான வாழைக்காய்களுடன் இருந்தது. இதன் தாய்க்கன்று மலேசியா நாட்டில் இருந்து உறவினரால் கொண்டு வரப்பட்டது. இது என்ன வகையான வாழை எனத் தெரியவில்லை. புங்கதளி இன வாழையைப் போல சுவை உடையது. நூறு மடல்களை தாண்டியும் காய்த்துக் கொண்டுள்ளது" என்றார்.

இந்த அதிசய வாழைக்கன்றை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.