.

Pages

Thursday, March 23, 2017

அதிரை பள்ளிகளில் குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பு ஊசி வழங்கும் முகாம் !

அதிராம்பட்டினம், மார்ச்-23
தஞ்சாவூர் மாவட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி ( MR Vaccine ) அனைத்து பள்ளிகளிலும் ஆண் பெண் இருபாலர்களுக்கும் பிப்ரவரி 6 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2005 பள்ளிகளில் 3,88,736 ஆண், பெண் மாணவர்களுக்கும் 1,725 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் 1,36,591 குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 135 சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. மேலும் தாமரங்கோட்டை, ராஜாமடம் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.