.

Pages

Tuesday, March 21, 2017

அரிய வகை வண்ணத்துப் பூச்சியை கொன்றவருக்கு சிறை தண்டனை !

அதிரை நியூஸ்: மார்ச்-21
பிரிட்டனின் பிரிஸ்டோல் நகரைச் சேர்ந்த பிலிப் குல்லன் என்ற 57 வயது பிரிட்டீஷ் பிரஜை ஒருவர் அரிய வகை இனமான Large Blues வண்ணத்துப் பூச்சியை கொன்றதற்காக சிறை தண்டனை பெற உள்ளார்.

கிளவ்செஸ்டர்ஷயர் மற்றும் சோமர்செட் ஆகிய பிரதேசங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (Protected Areas) இந்நபர் சிறிய வலை கொண்டு இவ்வகை வண்ணத்துப் பூச்சியை வேட்டையாடிக் கொண்டிருந்ததை தொடர்ந்து இவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் 30 தட்டுக்களில் பாடம் செய்து (Mounted) வைக்கப்பட்டிருந்த அந்துப் பூச்சிகள், 2 Large Blues உட்பட பல வகையான வண்ணத்துப் பூச்சிகளும் கைப்பற்றப்பட்டன.

சிறை தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு Large Blues வண்ணத்துப் பூச்சியின் சிறப்பு என்ன?

பிரிட்டனில் பாதுகாக்கப்பட்ட இனமாக (Protected Status) அறிவிக்கப்பட்டுள்ள இந்த வண்ணத்துப் பூச்சி விக்டோரியா மகாராணி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 1795 ஆம் ஆண்டுகளில் பிரிட்டனில் முதன்முதலாக தென்பட்ட இந்த வண்ணத்துப் பூச்சி 1979 ஆம் ஆண்டில் பிரிட்டனில் முற்றிலும் மறைந்தது. பின்பு 1983 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் 12 இடங்களில் மீண்டும் காணப்பட்டது.

கள்ளச் சந்தையில் (Black Market) பாடம் செய்யப்பட்ட ஒரு வண்ணத்துப் பூச்சியின் விலை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை 330 பவுண்டு தான் (அதாவது 345 யூரோக்கள் / 371 டாலர்கள்)

இப்ப சொல்லுங்கப்பு!  எந்த ஒரு டிஸ்கவரி சேனல் சாயல் செய்தியையும் அறிந்து கொள்வதும், பகிர்ந்து கொள்வதும் வேஸ்ட்டா?

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.