.

Pages

Tuesday, March 28, 2017

அதிரை அருகே விபத்தில் மாணவர் பலி !

அதிராம்பட்டினம், மார்ச்.28-
தஞ்சாவூர் மாவட்டம் அதிரையை அடுத்த செந்தலைப்பட்டினம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் நாகூர்பிச்சை. இவரது மகன் ஜம்மூன் அலி ( வயது 16) 10 வது படித்து விட்டு, மேல்படிப்பு செல்லும் ஏற்பாட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு செந்தலைப்பட்டினம் கடைவீதிக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்பொழுது  கிழக்கு கடற்கரை சாலையில், வேளாங்கன்னியிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த மாணவர் ஜம்மூன் அலி மீது மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாணவர் ஜம்மூன் அலியை செந்தலைப்பட்டினம் பொதுநலச் சங்கத்தினர் தங்களது ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனாலும் மாணவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மாணவரது உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா வேன் ஓட்டுநர் சுதன் என்பவரை பிடித்து, சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இண்ணாலில்லாஹிவஇண்ணாஇலைஹிராஷீவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  6. inna lillahi wa inna ilaihi rajwoon

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  8. Inna ilahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. Very shocking.... May Allah give peace to the grieved family

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.