அதிரை நியூஸ்: மார்ச்-21
புனித நகரங்களான மக்கா மதினாவை இணைக்கும் அல் ஹரமைன் ரயில்வே திட்டம் முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 470 கி.மீ தூரத்தில் இதுவரை 450 கி.மீக்கான பணிகள் முடிந்துள்ளன. புனித மக்கா அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதன்மை ரயில் நிலையமான அல் ருசைபா பிரதேச (Al Rusaifah District) பகுதிகளில் மட்டுமே சுமார் 20 கி.மீக்கான பாதைப் பணிகள் எஞ்சியுள்ளன.
இந்த ரயில் மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் செல்வதுடன் ஜித்தா, கிங் அப்துல்லா எகனாமி சிட்டி மற்றும் ரபீஹ் ஆகிய நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மேல் 138 ரயில்வே பாலங்கள், ஒட்டகங்கள் இருபுறமும் மேயச்சலுக்கு கடந்து செல்ல ஏதுவாய் 12 தடையில்லா பாதைகள், மழை, வெள்ளநீரை வெளியேற்ற 840 நிலத்தடி பாதைகள் என பல்வேறு நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள இந்த அல் ஹரமைன் ரயில்வே திட்டம் பணிகள் முற்றிலும் நிறைவுற்று எதிர்வரும் டிசம்பருக்கு இயக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
புனித நகரங்களான மக்கா மதினாவை இணைக்கும் அல் ஹரமைன் ரயில்வே திட்டம் முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 470 கி.மீ தூரத்தில் இதுவரை 450 கி.மீக்கான பணிகள் முடிந்துள்ளன. புனித மக்கா அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதன்மை ரயில் நிலையமான அல் ருசைபா பிரதேச (Al Rusaifah District) பகுதிகளில் மட்டுமே சுமார் 20 கி.மீக்கான பாதைப் பணிகள் எஞ்சியுள்ளன.
இந்த ரயில் மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் செல்வதுடன் ஜித்தா, கிங் அப்துல்லா எகனாமி சிட்டி மற்றும் ரபீஹ் ஆகிய நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மேல் 138 ரயில்வே பாலங்கள், ஒட்டகங்கள் இருபுறமும் மேயச்சலுக்கு கடந்து செல்ல ஏதுவாய் 12 தடையில்லா பாதைகள், மழை, வெள்ளநீரை வெளியேற்ற 840 நிலத்தடி பாதைகள் என பல்வேறு நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள இந்த அல் ஹரமைன் ரயில்வே திட்டம் பணிகள் முற்றிலும் நிறைவுற்று எதிர்வரும் டிசம்பருக்கு இயக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.