.

Pages

Tuesday, March 21, 2017

அமெரிக்கா செல்லும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை !

அதிரை நியூஸ்: மார்ச்-21
சமீபத்தில் அமெரிக்க மோடி என அழைக்கப்படும் டொனால்டு டிரம்பின் இனவெறிச் சட்டத்தால் சில முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள், அகதிகள் அமெரிக்காவுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அநியாய தடையை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றங்களும், பொது மக்களும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று முதல் அரபு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐபேட், மொபைல் போன்கள், கேமராக்கள் போன்றவற்றை கேபின் பேக்கஜ் (Cabin Baggage) ஆக விமானத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஒரு பயணி தன்னுடன் ஒரேயொரு சிறிய மொபைல் போன் மற்றும் சிறிய ரக மருத்துவ உதவிக்கான கருவி (Medical Kit) ஒன்றைத் தவிர பிற எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல உடனடி தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை அமெரிக்கா செல்லும் விமானம் தவிர பிற தடங்களில் பின்பற்றப்படாது வழமைபோல் தொடரும் எனவும் சில அரபு நாட்டு விமான நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

இந்த திடீர் தடையால் அபுதாபி, துபை (அமீரகம்), ஜெத்தா, ரியாத் (சவுதி அரேபியா), கெய்ரோ (எகிப்து), அம்மான் (ஜோர்டான்), குவைத், காஸபிளங்கா (மொரோக்கோ),தோஹா (கத்தார்), இஸ்தான்புல் (துருக்கி) ஆகிய நகரங்கிலிருந்து செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்காட்டியின் ஆட்சியில் இன்னும் பல கேனத்தனமான சட்டங்கள் வரும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.