அதிராம்பட்டினம், மார்ச்-23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் பொருளியல் துறையின் சார்பாக, 'பொருளியல் மன்ற'
ஆண்டு விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்தார். பொருளியல் துறை தலைவரும், மன்ற அமைப்பாளருமாகிய டாக்டர். மேஜர் எஸ்.பி கணபதி வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். கல்லூரி முன்னாள் முதல்வர் ஏ.முகமது அப்துல் காதர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற கல்லூரி பொருளாதார துறை இளங்கலை மாணவர் எஸ். சாலமன், அதே பிரிவைச் சேர்ந்த மூன்றாமிடம் பிடித்த மாணவி ஆர். நந்தினி ஆகியோருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் மன்ற ஆண்டு விழாவையொட்டி கல்லூரியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தொடக்கத்தில் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை என்.சித்ரா அறிமுக உரை நிகழ்த்தினார். விழா முடிவில் பேராசிரியர் எஸ். அபுதாகிர் நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் பொருளியல் துறையின் சார்பாக, 'பொருளியல் மன்ற'
ஆண்டு விழா கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்தார். பொருளியல் துறை தலைவரும், மன்ற அமைப்பாளருமாகிய டாக்டர். மேஜர் எஸ்.பி கணபதி வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அண்ணா சிங்காரவேலு கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். கல்லூரி முன்னாள் முதல்வர் ஏ.முகமது அப்துல் காதர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற கல்லூரி பொருளாதார துறை இளங்கலை மாணவர் எஸ். சாலமன், அதே பிரிவைச் சேர்ந்த மூன்றாமிடம் பிடித்த மாணவி ஆர். நந்தினி ஆகியோருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் மன்ற ஆண்டு விழாவையொட்டி கல்லூரியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தொடக்கத்தில் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை என்.சித்ரா அறிமுக உரை நிகழ்த்தினார். விழா முடிவில் பேராசிரியர் எஸ். அபுதாகிர் நன்றி கூறினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.